நாட்டில் புதிய மாறுபாட்டைக் கொண்ட கோவிட்- 19 தொற்று - விழிப்புடன் செயற்படுமாறு பொது மக்களிடம் வேண்டுகோள்
நாட்டில் புதிய மாறுபாட்டைக் கொண்ட கொரோனா தொற்றுக்கள் கண்டறியப்பட்டதை அடுத்து, கூடுதல் விழிப்புடன் நடந்துக்கொள்ளுமாறு பொதுமக்கள் கோரப்பட்டுள்ளனர்.
பொதுமக்கள் தமது நடமாட்டங்களை கட்டுப்படுத்துவதுடன், சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும் என்று சுகாதார சேவைகளின் துணை பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
புதிய மாறுபாடு மிகவும் பரவக்கூடியது என்பதால், சுகாதார வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிப்பது மற்றும் நடமாட்டங்களை கட்டுப்படுத்துவது அவசியம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தேவையின்றி நிகழ்ச்சிகளையும், விருந்துபசாரங்களையும் ஒழுங்கமைக்க வேண்டாம் என்றும் அவர் கோரியிருக்கிறார்.
அத்துடன் திருமணங்கள் மற்றும் இறுதி சடங்குகள் நடைபெறும் போது, மக்கள் முகமூடி அணிந்து சமூக தூரத்தை பராமரிக்குமாறு பொதுமக்களை கேட்டுக்கொள்வதாக ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
மேலும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களை அவர்களுடன் ஒன்றிணைய வேண்டாம் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

ராதிகாவிற்கு சீரியலில் இப்படியொரு டுவிஸ்டா? குழப்பத்தில் நிற்கும் கோபி.. இனி என்ன செய்ய போகிறார் தெரியுமா? Manithan

திருமணமான 8 மாதத்தில் புதுமணப்பெண் மரணம்! சிக்கிய கணவன், மாமியார்..அம்பலமான அதிர்ச்சி உண்மை News Lankasri

நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா, CWC புகழ் மணிமேகலையிடம் கேட்ட ரசிகர்- அவர் கொடுத்த உண்மை பதில் Cineulagam

இப்படி தான் சமந்தாவின் வாழ்க்கை இருக்கும்..கச்சிதமாய் கணித்த Aaliiyah!என்ன சொல்லிருக்கிறார் தெரியுமா? Manithan

இந்த மாதத்துடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முடிவுக்கு வருகிறதா?- வெளிவந்த விவரம், ரசிகர்கள் ஷாக் Cineulagam
