நாடாளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வலவிற்கு பிடியாணை உத்தரவு
தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வலவை கைது செய்யுமாறு மஹர நீதவான் நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது.
சப்புகஸ்கந்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பான வழக்கு கடந்த 13 ஆம் திகதி மஹர நீதவான் நீதிமன்றத்தில் மஹர மேலதிக நீதவான் பண்டார இலங்கசிங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
புதிய எரிபொருள் QR பதிவில் ஏற்பட்டுள்ள சிக்கல்! சற்றுமுன்னர் அரசாங்க தரப்பிலிருந்து வெளியான அறிவிப்பு
நீதிமன்றில் முன்னிலை
சப்புகஸ்கந்த பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு சந்தேகநபரான அசோக ரன்வல மீது இன்று, நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்துள்ளது.

அதன்படி, அசோக ரன்வல மீது சாலை விபத்தைத் தடுக்கத் தவறியமை, கவனக்குறைவாக வாகனம் செலுத்தியமை, கடுமையான காயங்களை ஏற்படுத்தியமை மற்றும் செலுத்த தகுதியற்ற வாகனத்தை ஓட்டி கடுமையான காயங்களை ஏற்படுத்திய ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இதன்போது, வழக்கு விசாரணைக்காக அவர் நீதிமன்றில் முன்னிலையாகாத நிலையில் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போகும் கோமதி.. மகன்களிடம் ரூ. 10 லட்சத்தை திரும்ப கேட்ட பாண்டியன்.. அடுத்து பாண்டியன் ஸ்டோர்ஸில் நடக்கப்போவது இதுதான் Cineulagam
துபாயில் ICU-வில் தாய்: இந்தியா வர ரூ 50 லட்சம் கேட்கும் ஏர் ஆம்புலன்ஸ்: தவிக்கும் தமிழர் News Lankasri