பொத்துவில் - பொலிகண்டி வரையிலான பேரணி - சாணக்கியன் உள்ளிட்ட சிலருக்கு நீதிமன்றம் அழைப்பாணை
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் உள்ளிட்ட சிலருக்கு அழைப்பாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான போராட்டத்தில் ஈடுபட்டமை தொடர்பில் கல்முனை நீதிமன்றினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சாணக்கியன் உள்ளிட்ட ஏழு பேருக்கு இவ்வாறு அழைப்பாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கல்முனை நீதிமன்றம் அழைப்பாணை உத்தரவு பிறப்பித்துள்ளது.
நீதிமன்றின் உத்தரவினை மீறி போராட்டத்தில் பங்கேற்றதாக இவர்களுக்கு எதிராகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்தப் போராட்டத்தில் பங்கேற்கக்கூடாது என சுமார் 29 பேருக்கு எதிராக நீதிமன்றில் பொலிஸார் தடையுத்தரவுகளை பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எவ்வாறெனினும், சாணக்கியன் உள்ளிட்ட ஏழு பேர் தடையுத்தரவினை மீறி போராட்டத்தில் பங்கேற்றனர்.
இதன் அடிப்படையில் சாணக்கியன் உள்ளிட்ட ஏழு பேருக்கு எதிராக இவ்வாறு நீதிமன்றம் அழைப்பாணை உத்தரவு பிறப்பித்துள்ளது.





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 21 மணி நேரம் முன்

IQ Test: சிறையிலிருந்து தப்பித்தவர் யார்? 5 வினாடிகளில் புதிரைத் தீர்த்து மக்களை காப்பாத்துங்க Manithan

ரோஹினி, க்ரிஷ் மாற்றி மாற்றி சொன்ன விஷயம், சந்தேகத்தில் முத்து-மீனா, அப்படி என்ன நடந்தது... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam

இளவரசர் ஜார்ஜ் இனி தன் குடும்பத்துடன் சேர்ந்து பறக்கமுடியாது: வித்தியாசமான ராஜ குடும்ப விதி News Lankasri
