மன்னார் - கோவில் மோட்டை அரச காணி வழக்கில் வழங்கப்பட்டுள்ள உத்தரவு

Mannar Court
By Independent Writer Oct 28, 2021 06:02 AM GMT
Report

மன்னார் - மடு கோவில் மோட்டை அரச காணி வழக்கு நீதிமன்றத்தில் வைத்து இணக்கமாக முடிக்கப்பட்டுள்ளது.

மன்னார் - மடு கோவில் மோட்டை அரச வயல்காணிகளில் சுமார் 40 வருடங்களுக்கு மேலாக பெரியபண்டிவிரிச்சான் - மேற்கு விவசாயிகள் பரம்பரை பரம்பரையாக விவசாயம் செய்து வந்துகொண்டிருக்கிற நிலையில் குறித்த காணி தமக்குரியது என்றும் குறித்த காணியை தங்களுக்கு வழங்குமாறும் மடு திருத்தல நிர்வாகத்தினர் கூறி வருகின்றனர்.

தாம் பரம்பரை பரம்பரையாக விவசாயம் செய்து வருகின்ற கோவில் மோட்டை அரச வயல் காணியை எங்களுகே வழங்குமாறு கடந்த ஒரு வருடமாக உண்ணாவிரதம் போன்ற பல போராட்டங்களை கோவில் மோட்டை விவசாயிகள் முன்னெடுத்திருந்த நிலையில் குறித்த கோவில் மோட்டை அரச காணியை விவசாயிகளுக்கு வழங்குமாறு வடக்கு மாகாணம் முடிவெடுத்து, குறித்த காணியை கோவில் மோட்டை விவசாயிகளுக்கு பிரித்தளிக்குமாறு மடு பிரதேச செயலாளரால் கடிதங்கள் அனுப்பப்பட்டிருந்தன.

இந்நிலையில் குறித்த கோவில் மோட்டை விவகாரம் தொடர்பில் மடு பங்குத் தந்தை உட்பட மன்னார் ஆயர் இல்லம் பொலிஸாரின் உதவியுடன் மன்னார் நீதிவான் நீதிமன்றத்தை நாடியிருந்த நிலையில் குறித்த வழக்கு நேற்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

வழக்கு விசாரணையின் போது பங்குத் தந்தைகள் தரப்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ரியண்டி அரச குணரத்தன தலைமையில் 18 சட்டத்தரணிகள் முன்னிலையானார்கள், கோவில் மோட்டை கிறிஸ்தவ விவசாயிகள் தரப்பில் சட்டத்தரணி ஹுனைஸ் தலைமையில் மூவர் முன்னிலையாகியிருந்தனர்.

அரச தரப்பிலும் சட்டத்தரணி ஒருவர் முன்னிலையாகியுள்ளார். பங்குத் தந்தைகள் தரப்பில் தற்போது 54 ஏக்கர் கோவில் மோட்டை அரச வயல் காணிகளில் பெரும்போக பயிர்ச் செய்கை மேற்கொண்டுவரும் கோவில் மோட்டை விவசாயிகள் தங்களுக்கு குத்தகை தர வேண்டுமெனவும், மிகுதியுள்ள காணிகளை பங்குத் தந்தைகளுக்கு கொடுக்க வேண்டுமெனவும், கோவில் மோட்டையில் விவசாயம் செய்யும் விவசாயிகளையும் கைது செய்யுமாறும் பங்குத் தந்தைகள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் குழாம் வாதத்தினை முன்வைத்தனர்.

அப்போது பதிலளித்த நீதிபதி கோவில் மோட்டை காணி உங்களுடையது என்பதற்கான ஆவணத்தை தாருங்கள் அதை வைத்து நீதியை வழங்குகிறேன் என தெரிவித்திருந்தார்.

அதற்கு பதிலளித்த பங்குத்தந்தைகள் தரப்பு சட்டத்தரணிகள் கோவில் மோட்டை காணிக்கான ஆவணங்கள் எங்களிடம் இல்லையென தெரிவித்துள்ளனர்.

அதற்கு பதிலளித்த நீதிபதி, சட்டமென்பது விவசாயிகள், பங்குத் தந்தைகள், பொலிஸார் எல்லோருக்கும் சமனானது, குறித்த கோவில் மோட்டை காணி அரச காணியாக இருக்கின்றபோது, உங்களிடம் ஆவணங்கள் ஏதுமில்லாத நிலையில், எப்படி நீங்கள் வாதிடுவது போல் தீர்ப்பு வழங்க முடியும்? அரச காணியில் விவசாயிகள் விவசாயம் செய்யத்தான் முனைவார்கள் என தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளித்த கோவில் மோட்டை விவசாயிகள் தரப்பிலான சட்டத்தரணிகள் குழு, இந்த கோவில் மோட்டை அரச வயல் காணியில் கோவில் மோட்டை விவசாயிகள் 40 வருடங்களுக்கு மேலாக தகப்பன் அல்லது தகப்பன் இறந்த பின்பு மகனென பரம்பரை பரம்பரையாக விவசாயம் மேற்கொண்டு வருகின்றனர், அரச காணிக்கு ஏன் அவர்களுக்கு குத்தகை கொடுக்க வேண்டுமென கேள்வி எழுப்பியிருந்தனர்.

அப்படி கொடுக்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு பங்குத் தந்தைகள் தரப்பில் இலங்கை காணி ஆனையாளர் நாயகத்தால் கோவில் மோட்டை காணியில் 5 ஏக்கர் மடுத்திருத்தலத்திற்கு விவசாய நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளமைக்கான ஆவணத்தை முன்வைத்து, குறித்த காணியில் 5 ஏக்கரிலாவது பங்குத்தந்தைகளுக்கு விவசாயம் மேற்கொள்ள அனுமதிக்க வேண்டுமென கோரப்பட்டது.

இதற்கு கோவில் மோட்டை விவசாயிகள் தரப்பிலான சட்டத்தரணிகள் அந்த 5 ஏக்கரிலும் கோவில் மோட்டை விவசாயிகள் விவசாயம் மேற்கொண்டுள்ளனர், வேறேதும் காணிகளிருந்தால் செய்யுங்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது, மேலும் இந்த போகத்திற்கு மட்டும்தான் இந்த நடைமுறையெனவும், அரச அதிகாரிகள் இதை காணி வழங்கும் முறையின் அடிப்படையில் மேலதிக செயற்பாடுகளை முன்னெடுக்குமாறும் நீதிபதி தெரிவித்திருந்ததோடு குறித்த விவகாரம் இணக்கமாக முடிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பில் குறித்த வழக்கில் முன்னிலையான அரச சட்டத்தரணி இந்த காணி முழுக்க அரசாங்கத்திற்கு சொந்தமானது, இம்முறை பெரும்போகம் செய்யப்பட்டிருப்பதால் இந்த இணக்கப்பாட்டிற்கு அடிப்படையில் இப்படியே செய்யட்டும், ஆனால் வரும் முறை அரசாங்கம்தான் தீர்மானிக்கும் இந்த காணியை யாருக்கு, எப்படி வழங்குவதென அவர் தெரிவித்திருந்தார். 

4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

கட்டுவன், Bondy, France

06 May, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, South Harrow, United Kingdom

05 May, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
மரண அறிவித்தல்

கட்டுடை, நல்லூர், Scarborough, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், Brampton, Canada

02 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Drancy, France

08 May, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, சிலாபம், கொழும்பு, St. Gallen, Switzerland

07 May, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Aubervilliers, France

04 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US