சட்டவிரோதமாக மான் ஒன்றை வைத்திருந்த நபருக்கு விளக்கமறியல் (Photos)
மட்டு. கரடியானாறு பொலிஸ் பிரிவிலுள்ள பங்குடாவெளி பிரதேசத்திலுள்ள வீடு ஒன்றில் அனுமதியின்றி 5 வயது மான் ஒன்றை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவரை எதிர்வரும் 9ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கமைய சம்பவதினமான நேற்று இரவு பங்குடா வெளி பிரதேசத்திலுள்ள குறித்த வீட்டை கரடியனாறு பொலிஸாருடன் வனவிலங்கு அதிகாரிகள் முற்றுகையிட்டனர்.
இதன்போது அங்கு மறைத்து வைத்திருந்த சுமார் 5 வயதுடைய மான் ஒன்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.
மேலும் இதன்போது வீட்டின் உரிமையாளரை கைது செய்து அவரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் முற்படுத்திய போது அவரை எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் மானை வனவிலங்கு திணைக்களத்தில் ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.


தனக்கு இப்படி நடந்தது எப்படி, அதனை கண்டுபிடித்த ஆனந்தி.. சிங்கப்பெண்ணே சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

viral video: சிறுவனின் மடியில் ஒய்யாரமாக ஓய்வெடுக்கும் ராட்சத மலைப்பாம்பு! மெய்சிலிர்க்கும் காட்சி Manithan

மகாநதி சீரியலில் அடுத்து விஜய்க்கும், வெண்ணிலாவிற்கும் திருமணம் நடக்கப்போகிறதா?.. படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam
