மின்சாரம் தாக்கி கணவன் - மனைவி பலி
புத்தளத்தில் மின்சாரம் தாக்கியதில் கணவன் மற்றும் மனைவி ஆகியோர் உயிரிழந்த துயர சம்பவம் பதிவாகி உள்ளது.
இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரித்துள்ளனர்.
சம்பவத்தில் 54 வயதான எஸ். ஏ. எஸ். ஸ்டான்லி திலகரத்ன மற்றும் 53 வயதான சந்திரிகா மல்காந்தி என்பவர்களே உயிரிழந்துள்ளனர்.
மின்சார இணைப்பு
உயிரிழந்த நபர் முந்தலம பகுதியில் கார் கழுவும் நிலையம் ஒன்றை நடத்தி வந்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இந்நிலையில் வீட்டில் தண்ணீர் பாய்ச்சும் மோட்டருக்கான மின்சார இணைப்பில் ஏற்பட்ட பழுதை சீர்செய்யும் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
இதன்போது கணவனை காப்பாற்ற முயற்சித்த மனைவியும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிரேத பரிசோதனை
கணவன் மற்றும் மனைவி அயலவர்களால் முந்தல் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த தம்பதியினரின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை புத்தளம் ஆதார வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்டது. சம்பவம் தொடர்பான விசாரணைகளை முந்தல பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
வீட்டைவிட்டு வெளியே போக சொன்ன பார்வதி, கண்ணீர்விட்டு அழுத விஜயா... சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
மூத்த குடிமக்களுக்கு சிறந்த ஆஃபர் - ரூ.1,000 முதலீடு செய்தால், மாதம் ரூ.20,500 பெறலாம் News Lankasri
படப்பிடிப்பு தளத்தில் திடீர் சண்டை போட்டுக்கொண்ட மகாநதி சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam
2026: 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்... 4 பிரபல ஜோதிட நிபுணர்களின் கணிப்பு ஒரே பார்வையில்! Manithan