பஹான்துடுவ ஆபாச காணொளி வெளியிட்ட தம்பதிக்கு சிறைத் தண்டனை!
பலன்கொட பஹான்துடுவ நீர்வீழ்ச்சியில் ஆபாச காணொளியை பதிவு செய்து வெளியிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய தம்பதியினருக்கு நீதிமன்றம் சிறைத் தண்டனை விதித்துள்ளது.
பஹான்துடுவ ஆபாச காணொளி நாட்டில் பெரும் சார்ச்சையை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. குறித்த காணொளியுடன் தொடர்புடைய தம்பதியினருக்கு மூன்று மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு அது ஏழு ஆண்டுகளுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த தம்பதியினருக்கு 10,800 ரூபா அபராதமும் விதிப்பதாக பலங்கொட நீதவான் ஜயரூவான் திஸாநாயக்க அறிவித்தார்.
மஹரகம பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதான ஆண் ஒருவருக்கும், எல்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதான பெண் ஒருவருக்கும் இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய தம்பதியை கடந்த 3ம் திகதி பொலிஸார் கைது செய்து பின்னர் பிணையில் விடுதலை செய்திருந்தனர்.

புதிய அரசியல் ஒழுங்கில் புவிசார் அரசியல் யுத்தங்கள் 19 மணி நேரம் முன்

போதைப் பொருள் பிரச்சனையில் சிக்கிய ஸ்ரீகாந்திற்கு தண்டனை கிடைத்தால் இத்தனை வருடம் ஜெயிலா? Cineulagam

இந்தியாவை உலகத் தடைகளிலிருந்து ஈரான் ரகசியமாகக் காப்பாற்றியது எப்படி? பேசப்படாத பின்னணி News Lankasri

முதல்முறையாக ஏவுகணை சோதனை நடத்திய ஆசிய நாடு - சீனாவை எதிர்த்து பாதுகாப்புத் திட்டம் தீவிரம் News Lankasri
