ஆரியகுளத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஈ.பி.டி.பி வலியுறுத்து

Sri Lanka Jaffna Municipal Council Aariyakulam
By Independent Writer Jan 19, 2022 06:57 PM GMT
Independent Writer

Independent Writer

in சமூகம்
Report

வடக்கு - கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்தவர்களின் உச்ச நீதிமன்ற வழக்கு ஆவணங்கள் நீண்ட காலமாக மொழிப் பிரச்சினை காரணமாக நிலுவையிலுள்ளமையால் அவற்றை கால தாமதமின்றி விரைவுப்படுத்தி தீர்ப்புகளை வழங்குவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு இலங்கையின் பிரதம நீதியரசரிடம் வலியுறுத்துவதற்கு மகஜர் சமர்பிக்கும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ். மாநகரசபை உறுப்பினரும்,சிரேஸ்ட மனித உரிமை சட்டத்தரணியுமான றெமீடியஸ் முன்வைத்த யோசனைக்கு சபை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

யாழ். மாநகர சபையின் மாதாந்த அமர்வும், புதிய ஆண்டின் முதலாவது அமர்வும் இன்று நடைபெற்றது. இதன்போதே குறித்த முன்மொழிவுக்கு அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் கருத்துரைத்த உறப்பினர் றெமீடியஸ்,

வட மாகாணத்திற்கான விஜயமொற்றை முன்னெடுத்து எதிர்வரும் 30 ஆம் திகதி யாழ். மாவட்டத்திற்கு பிரதம நீதியரசர் வருகைதரவுள்ள நிலையில், வடக்கு - கிழக்கை சேர்ந்த மேன்முறையீட்டுக்காக சமர்ப்பித்தும் இதுவரை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாது.

தேங்கியுள்ள வழக்குகளை விரைவுபடுத்துமாறும் காலதாமதத்தை தவிர்த்து நீதிக்காக காத்திருக்கும் தரப்பினருக்கு விரைவான தீர்ப்பை வழங்க வேண்டும் என்றும் எமது சபையின் ஊடாக ஒரு முன்மொழிவை நிறைவேற்றி அதனை குறித்த ஆவணங்களுடன் அவரிடம் சமர்ப்பித்து வலியுறுத்துவது தொடர்பில் றெமீடியஸ் அதனை ஒரு முன்மொழிவாக சமர்ப்பிப்பதாகவும் குறிப்பிட்டார்.

இந்நிலையில் குறித்த யோசனையை சபை ஒருமனதாக ஏற்றுக்கொண்டு நிறைவேற்றியதுடன் குறித்த ஆவணங்களை பிரதம நீதியரசரிடம் சமர்ப்பிப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாக தெரிவித்திருந்தது.

இதேவேளை ஆளுநரின் அதிகாரங்கள் தொடர்பில் கடிதம் ஒன்று தமக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், அந்த கடிதத்தில் தேர்தல் ஆனைக்குளு உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களின் ஒழுக்கம் தொடர்பில் வரையறை செய்துள்ளதுடன், அவ்வாறு ஒழுக்கம் மற்றும் சட்டவரையறையை மீறி செயற்படும் உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவோ அல்லது அவரை நீக்கவோ அதிகாரம் ஆளுநருக்கு உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளதாக முதல்வர் மணிவண்ணனால் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே வாகன பகுதியில் ஒரே ஒரு அதிகாரியே இருப்பதால் வாகனங்களில் ஏற்படும் சாதாரண பழுதுகளை கூட உடனடியாக செய்ய முடியாதிருப்பதால் அவரது அதிகாரத்தை மேலும் பலருக்கு பகிர்ந்தளிப்பது தொடர்பிலும் வலியுறுத்தப்பட்டது.

இதனிடையே யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள சர்வதேச வர்த்தக கண்காட்சி தொடர்பிலும் சபையில் விவாதிக்கப்பட்டது.

குறிப்பாக இறுதியாக நடைபெற்ற குறித்த கண்காட்சிக்காக மாநகரசபைக்கு செலுத்த வேண்டிய நிதியான 30 இலட்சம் இதுவரை செலுத்தப்படாதிருந்ததாகவும் அதில் 10 இலட்சம் தற்போது குறித்த தரப்பினரால் செலுத்தப்பட்டுள்ளதாகவும் மிகுதி பணம் தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாகவும் முதல்வர் தெரிவித்திருந்தார்.

இதேநேரம் இம்முறை இறுக்கமாக வர்த்தக கண்காட்சியில் ஸ்ரோல் ஒன்றின் அறவீடு குறைப்பு மாநகரசபை இறுக்கமாக இருக்க வேண்டும் என்றும் நுழைவுச் சீட்டு உள்ளிட்ட விடயங்களில் மோசடி இடம்பெறாத வகையில் கண்காணிப்பு இறுக்கமாக்கப்பட வேண்டும் எனவும், வலியுறுத்தப்பட்டதுடன் அவ்வாறு மோசடிகள் காணப்பட்டால் கண்டுபிடிக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் 3 இலட்சம் ரூபா தண்டம் அறவிடப்பட வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் ஆரியகுளம் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட வேண்டும் என்றும் அப்பகுதியை புனரமைக்கும் போது இருந்துவந்த நிலை தற்போது மாறி பெரும் அசௌகரியங்களை ஏற்படுத்தும் சம்பவங்கள் நடந்தேறி வருவதால் அப்பகுதியில் சிசிரிவி பொருத்தல் அவசியம் என்றும் அதன் பாதுகாப்பையும் புனிதத் தன்மையையும் உறுதி செய்ய சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஈ.பி.டி.பி வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

மரண அறிவித்தல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Brampton, Canada

07 May, 2024
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
நன்றி நவிலல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Schaffhausen, Switzerland

15 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US