எவராக இருந்தாலும் தப்பவே முடியாது: ஹர்ஷண நாணயக்கார உறுதி
கடந்த ஆட்சியில் குற்றமிழைத்தவர்கள் எவராக இருந்தாலும் தப்பவே முடியாது என்று நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாணாயக்கார தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
“கடந்த ஆட்சியில் நடந்தேறிய ஊழல், மோசடிகள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளால்தான் நாடு அதளபாதாளத்துக்குச் சென்றது.
மக்களால் நிறுவப்பட்ட ஆட்சி
கடந்த ஆட்சியாளர்கள் நாட்டைச் சீரழித்து குடும்ப ஆட்சியை முன்னெடுத்தபடியால்தான் மக்கள் அணிதிரண்டு, அந்த ஆட்சியாளர்களை விரட்டியடித்தார்கள்.

தற்போதைய ஆட்சி மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் மக்களால் நிறுவப்பட்ட ஆட்சி. நீதியை எதிர்பார்த்துக் காத்திருக்கும் மக்களால் நிறுவப்பட்ட ஆட்சி. எனவே, கடந்த ஆட்சியில் குற்றமிழைத்தவர்கள் எவராக இருந்தாலும் தப்பவே முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
"காலம் முடிவு செய்துவிட்டது".. முதலமைச்சர் விஜய்யை தொடர்ந்து அரசியலில் களமிறங்குகிறாரா சூர்யா.. Cineulagam
TRP-ல் மட்டுமில்லை, இதிலும் அய்யனார் துணை தான் நம்பர் 1, அடுத்தடுத்து எந்த சீரியல்கள் உள்ளன தெரியுமா Cineulagam
50 கிலோ விஷம், 30,000 காப்ஸ்யூல்கள்: 15,000 பேரை கொல்ல சதித்திட்டம்: பயாஸ் பிரேம்ஜி கைது News Lankasri