மத்திய மாகாணத்தில் கோவிட் சிகிச்சை நிலையங்கள் நோயாளிகளால் நிறைந்துள்ளன
மத்திய மாகாணத்தில் உள்ள அனைத்து கோவிட்-19 சிகிச்சை நிலையங்களிலும் நோயாளிகள் நிறைந்துள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் நிஹால் வீரசூரிய தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக மேலதிகமாக சில சிகிச்சை நிலையங்களை ஏற்படுத்தும் தேவை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையில் மத்திய மாகாணத்தில் கண்டறியப்படும் கோவிட் நோயாளியை வேறு மாகாணங்களில் உள்ள சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைக்க நேரிட்டுள்ளதாகவும் மருத்துவர் வீரசூரிய குறிப்பிட்டுள்ளார்.
மத்திய மாகாண ஆளுநரின் செயலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.