தென்னிலங்கையில் நகர சபை லொறியில் கொண்டு செல்லப்பட்ட கோவிட் நோயாளி
கோவிட் தொற்றாளர் என உறுதி செய்யப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பதற்காக வீட்டில் காத்திருந்தவருக்கு சுவாச பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நோயாளி, தெவிநுவர நகர சபையில் உள்ள லொரி ஒன்றிலேயே அழைத்து செல்லப்பட்டுள்ளார். சுகாதார பிரிவினர் வரும் வரை பல நாட்களாக குறித்த நோயாளி வீட்டிலேயே இருந்துள்ளார். எனினும் பின்னர் நகர சபை வாகனத்தில் ஏற்றி செல்லும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை, தங்காலை பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கோவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளார்.
அவர் அண்மையில் விருந்து ஒன்றில் கலந்து கொண்டிருந்த நிலையில் அதில் கலந்து கொண்ட 5 பேர் கோவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.