கோவிட் நிலைமை குறித்து திருப்பதி கொள்ள முடியாது! - வைத்திய கலாநிதி ஹேமந்த ஹேரத்
2,500 தாண்டிய நாளாந்த கோவிட் -19 தொற்றாளிகளின் எண்ணிக்கை இப்போது சராசரியாக 2,200 ஆக உள்ளது.
ஆனால் இந்த நிலைமை குறித்து சுகாதார அதிகாரிகள் திருப்பதி கொள்ள முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகளின் துணை இயக்குநர் வைத்திய கலாநிதி ஹேமந்த ஹேரத், சுகாதார மேம்பாட்டு பணியகம் ஏற்பாடு செய்த செய்தியாளர் கூட்டத்தில் இதனை தெரிவித்தார்.
நிலைமையை நிர்வகிக்க சுகாதாரத் துறை தினசரி தொற்றாளர்களை எப்படியாவது குறைக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
இதேவேளை நோயாளிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள 21,402 மருத்துவமனை கட்டில்களில் 19,354 கட்டில்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை வரையில் நோயாளிகளால் நிரம்பியுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.