தெமட்டகொடையில் 26 பேருக்கு கோவிட் தொற்று
கொழும்பு, தெமட்டகொடையில் கோவிட் வைரஸால் இருபத்தாறு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று காலை 6 மணிக்கு முடிவடைந்த 24 மணி நேர காலப்பகுதியில் பெறப்பட்ட சோதனை முடிவுகளின் அடிப்படையில் அங்கு 26 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த வாரம் தெமட்டகொடையில் அதிக அளவில் பரவும் பி .1.617.2 (டெல்டா) மாறுபாடு கண்டறியப்பட்டது.
கோவிட் வைரஸின் இந்திய மாறுபாடு இலங்கையில் சமூகத்திற்குள்ளேயே கண்டறியப்பட்ட முதல் நிகழ்வு இதுவாகும்.
இந்தநிலையில் டெல்டா கொவிட் மாறுபாடு, பி 117 மாறுபாட்டை விட 50% வேகமானது மற்றும் அதிக அளவில் பரவக்கூடியது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்டா மாறுபாடு கண்டறியப்பட்ட தெமட்டகொடையில் உள்ள பகுதியை தனிமைப்படுத்தவும், மேலும் சோதனைகளை மேற்கொள்ளவும் கடந்த வெள்ளிக்கிழமை சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
டெல்டா மாறுபாட்டால் பாதிக்கப்பட்ட மக்களுடன் தொடர்பு கொண்ட அனைவருக்கும் சோதனைகள் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது