யாழில் மேலும் 20 பேருக்குக் கோவிட் தொற்று
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 20 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 28 பேருக்குக் கோவிட் வைரஸ் தொற்றுள்ளமை நேற்று கண்டறியப்பட்டுள்ளது என மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவபீடம், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆகிய இரண்டு ஆய்வுகூடங்களில் 807 பேரின் மாதிரிகள் நேற்று பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
அதில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 20 பேரும், கிளிநொச்சியில் 7 பேரும், முல்லைத்தீவில் ஒருவரும் என 28 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட 6 பேருக்குக் கோவிட் நோய்த்தொற்று உள்ளது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் 5 பேர் கோவிட் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தெல்லிப்பழை வைத்தியசாலையில் தனிமைப்படுத்தல் விடுதியில் ஒருவருக்குத் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் நான்கு பேருக்குத் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
அவர்கள் நால்வரும் தொற்றாளர்களுடன் முதல்நிலைத் தொடர்புடையவர்கள். சங்கானை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் நால்வர் கோவிட் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்கள் நால்வரில் இருவர் தொற்றாளர்களுடன் முதல்நிலையத் தொடர்புடையவர்கள். இருவர் வீதிப் புனரமைப்புப் பணியில் ஈடுபடுவர்கள்.
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சைக்குச் சென்ற 7
பேருக்குக் கோவிட்த் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவுக்குச் சிகிச்சைக்குச் சென்ற
ஒருவருக்கும் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது" - என்றார்.