திருகோணமலையில் உயிரிழந்த முதியவருக்கு கோவிட் தொற்று உறுதி
திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் - அக்கரைச்சேனை பகுதியில் உயிரிழந்த வயோதிபருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.
மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வயோதிபருக்கு கோவிட் உறுதி செய்யப்பட்டதையடுத்து அவரது உறவினர்கள் 11 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் எவருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை என மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி என்.எம்.எம்.ஹஸ்ஸாலி தெரிவித்தார்.
உயிரிழந்த நபரின் சடலம் மூதூர் தள வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.