சபாநாயகரின் பாதுகாவலர்கள் இருவருக்கு கொரோனா - சபாநாயகருக்கு PCR பரிசோதனை
நேற்றையதினம் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவின் பாதுகாப்பு பிரிவில் கடமையாற்றும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றி இருப்பது உறுதியானமையை அடுத்து, சபாநாயகரும் தனிமைப்படுத்தப்படலாம் என செய்திகள் வெளியாகின.
அதனையடுத்து, PCR பரிசோதனை மேற்கொள்ளுமாறு சுகாதார பிரிவினர் தன்னிடம் கோரிக்கை விடுத்தால், அதற்கு தயார் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவுக்கு பாதுகாப்பு வழங்கும் பொலிஸ் அதிகாரிகள் இருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
அதன் பின்னர் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் அனைவருக்கும் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றவில்லை என தெரியவந்துள்ளது.
எப்படியிருப்பினும் அவர்கள் எதிர்வரும் 31ஆம் திகதி மீண்டும் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.