சுகாதார அமைச்சின் அறிக்கைக்கு முரணாக பேராசிரியர் திஸ்ஸ விதாரண வெளியிட்டுள்ள தகவல்
கோவிட் தொற்று சமூகத்தில் பரவவில்லை என்ற சுகாதார அமைச்சின் அறிக்கைக்கு முரணாக, பேராசிரியர் திஸ்ஸ விதாரண, கொத்தனிக் கோவிட் தொற்றுகள் பதிவாகவில்லை, மாறாக தற்போது சமூகத்திற்குள்ளேயே கோவிட் தொற்று பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தொழில்நுட்ப ரீதியாக, சமூக பரவுதலுக்கும் நோயாளிகள் சமூகத்தில் இருந்து அறிவிக்கப்படுவதற்கும் வித்தியாசம் இருப்பதாக அண்மையில் சுகாதார அமைச்சகம் தெரிவித்திருந்தது.
எனினும் பேராசிரியர் விதாரண ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பாதிக்கப்பட்டவர்களில் குறைந்தது 80 சதவிகிதம் பேருக்கு அறிகுறிகள் தென்படவில்லை. மேலும் அவர்கள் சமூகத்தில் சுற்றித் திரிகிறார்கள் என்று கூறியுள்ளார்.
எனவே, அத்தகைய நோயாளிகளைக் கண்டறியும் வகையில் அதிக பிசிஆர் மற்றும் விரைவான என்டிஜென் சோதனைகளை மேற்கொள்வது மிகவும் முக்கியம் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போதைய முடக்கல் குறித்து கருத்து தெரிவித்த பேராசிரியர் வித்தாரண, நாட்டில் தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு மேற்கொள்ளப்படும் விதத்தில் தான் மகிழ்ச்சியடையவில்லை என்று கூறியுள்ளார்.