டுபாயில் போதைப்பொருள் வலையமைப்பை நடத்தும் குற்றவாளி: இருவர் கைது
டுபாயில் மறைந்திருந்து போதைப்பொருள் வலையமைப்பை நடத்தும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளான ஜோதி ரூபன் மற்றும் சேடவத்த கசுன் ஆகியோரின் நெருங்கிய கூட்டாளிகள் இருவர் வெளிநாட்டு கைத்துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கையில் குற்றவியல் வலையமைப்பு மற்றும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் குற்றவாளிகள் தொடர்பான விசேட விசாரணையின் போது இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபரிடம் விசாரணை
வெல்லம்பிட்டிய, ஃபோர்ட்டில மற்றும் அவிசாவளை,மீகவத்தை பிரதேசத்தில் வைத்து இந்த இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த பிரிவு தெரிவித்துள்ளது.
வெல்லம்பிட்டி ஃபோர்ட்டிலாவில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி மகசீன் மற்றும் ஒன்பது மி.மீ ரக 54 தோட்டாக்கள், ஃபோர்ட்டிலாவில் உள்ள வீடொன்றின் பின்புறம் புதைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபரின் சகோதரர்களில் ஒருவர் வசிக்கும் பகுதியில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக போருக்கு தயாராகும் நாடு - 800 ஏவுகணை தயாரிக்க சீனாவுடன் ஒப்பந்தம் News Lankasri

பாகிஸ்தானுக்கு புதிய அச்சுறுத்தல்... மிக ஆபத்தான R-37M ஏவுகணைகளை சொந்தமாக்கும் இந்தியா News Lankasri
