மதிய உணவுப் பொதி உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை குறைப்பு
கொத்து ரொட்டி உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இவ்வாறு உணவுப் பொருட்களின் விலை குறைக்கப்படுவதாக அகில இலங்கை உணவக சங்கத் தலைவர் ஹர்ஷன ருக்ஷான்(Harshana Rukshan) தெரிவித்துள்ளார்.
குறைக்கப்படும் விலை
நேற்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் நன்மையை நுகர்வோருக்கு வழங்கும் பொருட்டு இவ்வாறு உணவுப் பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இதன்படி, மதிய உணவுப் பொதி மற்றும் கொத்து ரொட்டி ஆகியவற்றின் விலை 25 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஏனைய சிற்றுண்டிப் பொருட்களின் விலை 10 ரூபாவினாலும் குறைக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
குணசேகரன் நெற்றியில் அதிரடியாக துப்பாக்கி வைத்த போலீஸ்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
Bigg Boss: பேபின்னு சொன்ன வாயை உடைச்சிடுவேன்... இருக்கையை எட்டி உதைத்த கம்ருதின்! பாருவின் காதல் முறிவு Manithan
குளிர்காலத்தில் மூச்சுவிடுவதற்கு சிரமப்படுறீங்களா? இந்த பாட்டி வைத்தியத்தை முயற்சித்து பாருங்க Manithan