தமிழ் பொது வேட்பாளர் கட்டமைப்பின் முக்கியஸ்தர் மீது எழுந்துள்ள சர்ச்சை
மக்கள் போராட்ட முன்னணியின் வேட்பாளர் ரூவான் போபகேயின் ஆதரவு பிரசார கூட்டத்தில் ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் மத்திய குழு உறுப்பினரும், அரசியல் உயர் பீட உறுப்பினரும், தமிழ் பொது வேட்பாளர் கட்டமைப்பின் முக்கியஸ்தருமான அருந்தவராஜா (மேழிக்குமரன்) கலந்து கொண்டமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சி தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் வவுனியா நகரசபை மண்டபத்தில் ரூவான் போபகேக்கு ஆதரவான பிரசார கூட்டம் நேற்று (01.09.2024) இடம்பெற்றது.
அரசியல் உயர் பீட உறுப்பினர்
இதன்போது கூட்டத்தில் ஈபிஆர்எல்எப் மத்திய குழு உறுப்பினரும், அரசியல் உயர் பீட உறுப்பினரும் கலந்து கொண்டமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ரூவான் போபகே அரகல போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் முக்கியமானவர் ஆவார்.

குறித்த உறுப்பினரே தமிழ் பொது வேட்பாளரை ஆதரிக்கும் பொதுக் கட்டமைப்பில் வவுனியா மாவட்ட நிதி கையாளுகைக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டு இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அடுத்த கட்டத்திற்கு நகரும் ஈரான் போர்... இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட 6,500 டன் வெடிமருந்துகள் News Lankasri
ஈரானிய ட்ரோன்கள் இனி காற்றில் கரையும்... ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இஸ்ரேல் வழங்கிய ஆயுதம் News Lankasri
நான் செத்துப்போகலாம்.. கண்கலங்கி அழும் அண்ணாமலை! சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam