வசந்த சமரசிங்கவின் சொத்து மதிப்பு.. சர்ச்சைக்கு விளக்கம்
தன்னிடம் உள்ள 27 கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்கள், தனது தலைமுறையினரிடமிருந்து பெறப்பட்டதாகவும் வணிகத்தில் ஈடுபடுவதன் மூலம் அதனை வளர்த்துக்கொண்டதாகவும் அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“எங்கள் கிராமம் தம்புத்தேகம ஆகும். அங்குள்ள அனைவருக்கும் எங்கள் குடும்பத்தினரை நன்றாகத் தெரியும்.
குடும்பத்தினரிடம் இருந்து பெறப்பட்ட சொத்துக்கள்
தம்புத்தேகமவிலிருந்து கொழும்புக்கு வந்து, களனி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற பின்னர், நான் அரசியலில் ஈடுபட ஆரம்பித்தேன்.

மக்கள் விடுதலை முன்னணியின் அங்கத்தவர்கள் வேறு எதுவும் செய்யாமல் அரசியலில் மட்டுமே ஈடுபடுவதாக சிலர் தவறாக எண்ணுகின்றனர்.
சம்பளம் பெறாமல் நாங்கள் எப்படி வாழ்கிறோம் என்று சிலர் எங்களிடம் கேள்வி கேட்கின்றனர்.

நாங்கள் அரசியலில் ஈடுபடும் அதேவேளை வணிகத்திலும் ஈடுபடுகின்றோம். அத்துடன், எனது குடும்பத்தினரிடம் இருந்து பெறப்பட்ட சொத்துக்களும் என்னிடம் உள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மேக் 5 வேகத்தில் வடிவத்தை மாறும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை - சாத்தியமற்றதை சாத்தியமாக்கும் சீனா News Lankasri
தமிழ் சினிமாவில் பிரியங்கா தேஷ்பாண்டே பாடியுள்ள ஒரே ஒரு பாடல், சூப்பர் ஹிட் தான்... என்ன பாடல் தெரியுமா? Cineulagam
மீனா செய்த காரியம், செம கோபத்தில் கோமதியிடம் செந்தில் கூறிய விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam
கடிதத்தில் இருப்பவர் குறித்து சக்திக்கு கிடைத்த க்ளூ, அவரது பெயர் என்ன... எதிர்நீச்சல் தொடர்கிறது எபிசோட் Cineulagam