இலங்கையர் கொலை செய்யப்பட்டமை நியாயமானது! - பாகிஸ்தான் அமைச்சரின் சர்ச்சை பேச்சு
பாகிஸ்தான் - சியால்கோட்டில் வன்முறை கும்பலால் இலங்கை மேலாளர் பிரியந்த குமார கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் நியாயப்படுத்தியுள்ளார்.
பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் Pervez Khattak இன் இந்த பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானில் பணியாற்றிய இலங்கையரான பிரியந்த குமார கடந்த வெள்ளிக்கிழமை மிக கொடூரமாக படுகொலை செய்யப்பட்டதுடன், உயிருடன் எரிக்கப்பட்டார்.
இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், பிரியந்தவின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்ற கோரிக்கையும் வலுப்பெற்றுள்ளது.
இதனையடுத்து பாகிஸ்தான் பிரதமரான இம்ரான்கான் கண்டிப்பாக குற்றவாளிகள் சட்டத்தின் முன் தண்டிக்கப்படுவார்கள் என்று உறுதியளித்துள்ளார்.
இந்நிலையிலேயே, குறித்த சம்பவம் தொடர்பில் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் வெளியிட்டுள்ள கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர்,
“இது மோசமான சம்பவம் என்று சொல்ல முடியாது. உணர்ச்சியில் இது போன்ற செயல்கள் சில நேரங்களில் நடந்துவிடுகிறது என்று கூறி, இந்த சம்பவத்தை நியாயப்படுத்தி பேசியுள்ளார்.”
இவரின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் ஒரு பாதுகாப்பு அமைச்சர் இப்படியா பொறுப்பற்று பேசுவது என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
The Defence Minister of Pakistan Pervaiz Khattak justifies the murder of #SrilankanManager, Priyantha Kumara who was brutally murdered by a violent mob. Khattak says that kids do such things in passion which doesn't mean things are bad.#Sialkot #Sialkot_incident #Sialkottragedy pic.twitter.com/lWTaYQn8bD
— Hamza Azhar Salam (@HamzaAzhrSalam) December 5, 2021
இதையும் படியுங்கள்.....
பாகிஸ்தானில் கொல்லப்பட்ட இலங்கையரை காப்பாற்ற முயன்ற நண்பருக்கு வழங்கப்படவுள்ள கௌரவம்
கண்களை தானம் செய்த இலங்கை விடயத்தில் பார்வையை இழந்துவிட்டோம்! வைத்தியர் அனுப்பிய உருக்கமான கடிதம்
பிரியந்த குமார படுகொலையில் நீதியான விசாரணை வேண்டும்: பாகிஸ்தான் எதிர்க்கட்சி கோரிக்கை

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட காதலனின் இரத்தத்தை செலுத்திக்கொண்ட சிறுமி - அதிர்ச்சி சம்பவம்! Manithan

அவள் பயங்கரமானவள்... மனைவி குறித்து பிரதமர் வேட்பாளர் ரிஷி சுனக் கூறியுள்ள வார்த்தைகள் News Lankasri

உக்ரைன் ராணுவ வீரர்களுக்கு கவர்ச்சிகரமான புகைப்படங்களை அனுப்பும் அந்நாட்டு பெண்கள்! காரணம் இதுதான் News Lankasri

ஜேர்மனி செல்லும் கனவில் விமானநிலையம் வந்த நாதஸ்வர கலைஞர்கள்! புரோகிதரால் சுக்குநூறான பரிதாபம்.. எச்சரிக்கை செய்தி News Lankasri

தமிழரை மணந்த ரம்பாவின் ரொமான்ஸ்! அழகிய ஜோடியை பார்த்து கண் வைக்கும் ரசிகர்கள் - வைரலாகும் புகைப்படம் Manithan

மகனை கையில் தூக்கிக்கொண்டு, மனைவியுடன் போஸ் கொடுத்த கேப்டன் விஜயகாந்த்.. புகைப்படத்தை பாருங்க Cineulagam

ரஜினியின் கூலிங் கிளாஸில் ஏற்பட்ட மாற்றம்! பதறும் ரசிகர்கள் - அவருக்கு இப்படி ஒரு பிரச்சினையா? Manithan
