பிரியந்த குமார படுகொலையில் நீதியான விசாரணை வேண்டும்: பாகிஸ்தான் எதிர்க்கட்சி கோரிக்கை
பாகிஸ்தானில் பிரியந்த குமார என்ற இலங்கையர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் நியாயம் வழங்கப்பட வேண்டுமென அந்நாட்டு எதிர்க்கட்சித் தலைவர் சயிட் யூசுப் ராசா கில்லானி (Yousaf Raza Gillani) கோரிக்கை விடுத்துள்ளார்.
பாகிஸ்தானின் எதிர்க்கட்சித் தலைவர் அந்நாட்டு அரசாங்கத்திடம் இலங்கையர் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்களுக்கு கடுமையான தண்டணை விதிக்கப்பட வேண்டுமெனவும் இது அனைவருக்கும் ஓர் பாடமாக அமைய வேண்டுமெனவும் கில்லானி கோரிகை விடுத்துள்ளார்.
பாகிஸ்தானின் நீதித்துறை மீது இலங்கை மக்களுக்கு நம்பிக்கை ஏற்படக்கூடிய வகையில் நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |