சர்சைக்குரிய கருத்துகளை வெளியிட்ட தேரருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சர்சைக்குரிய ராஜாங்கனே சத்தாரத்ன தேரர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையிலான கருத்துக்களை வெளியிட்ட குற்றச்சாட்டின் பேரில் ராஜாங்கனே சத்தாரத்ன தேரர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
முறைப்பாட்டின் அடிப்படையில் கைது
இந்நிலையில் நேற்று(12.07.2023) கோட்டை நீதவான் நீதிமன்றம் அவருக்குப் பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது.
சர்சைக்குரிய பாஹியங்கல ஆனந்த சாகர தேரர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் ராஜாங்கனே சத்தாரத்ன தேரர் கடந்த மே மாதம் அனுராதபுரத்தில் கைது செய்யப்பட்டார்.
ராஜாங்கனே சத்தராதன தேரர், மத சகவாழ்வுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலும், பௌத்த மதத்திற்கு அவமரியாதை ஏற்படுத்தும் வகையிலும் கருத்துக்களை வெளியிட்டதாக அவருக்கு எதிரான முறைப்பாட்டில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |