மட்டக்களப்பு கத்தோலிக்கத் தேவாலயத்திற்கு பிள்ளையானை அழைத்ததால் வெடித்தது பெரும் சர்ச்சை!

Batticaloa Easter Attack Sri Lanka Sivanesathurai Santhirakanthan
By Independent Writer Feb 26, 2024 08:03 PM GMT
Independent Writer

Independent Writer

in சமூகம்
Report

மட்டக்களப்பு மரியாள் இணைப் பேராலயத்தில் 2005 ஆம் ஆண்டு இடம்பெற்ற படுகொலை ஒன்றில் குற்றம்சாட்டப்பட்டு, 5 வருடங்கள் சிறைத்தண்டனை அனுபவித்த ஒருவரை அதே மரியாள் பேராலயத்திற்கு அருட்தந்தை வரவேற்ற விடயம் தமிழ் மக்கள் மத்தியில் அதிகம் கண்டனத்துக்கு உள்ளாகி வருகின்றது.

ஈஸ்டர் குண்டுத்தாக்குதலுக்கு முன்னர் வரை, இலங்கையின் வரலாற்றில் ஒரு தேவாலயத்தினுள் நடைபெற்ற மிக மோசமான படுகொலை என்று, 2005ஆம் ஆண்டில் புனித மரியாள் இணைப் பேராலயத்தில் நடைபெற்ற படுகொலையைத்தான் கூறுவார்கள்.

புனித மரியாள் இணைப் பேராலயம்

மட்டக்களப்பு நகரின் மத்தியில் உள்ள புனித மரியாள் இணைப் பேராலயத்தில் 2005ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் தின நள்ளிரவு ஆராதனை நடந்துகொண்டிருந்தபோதுதான், அந்தப் படுகொலை நடைபெற்றது.

திருகோணமலை மட்டக்களப்பு மறைமாவட்ட பேராயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை முன்னிலையில் அந்தப் படுகொலை நடாத்தப்பட்டது.

மட்டக்களப்பு கத்தோலிக்கத் தேவாலயத்திற்கு பிள்ளையானை அழைத்ததால் வெடித்தது பெரும் சர்ச்சை! | Controvercy Ove Pillayan Visit To St Maris Church

பேராயரிடம் திருவிருந்து பெற்றுவிட்டுத் திரும்புகின்ற நேரத்தில் திருப்பலிப்பீடத்தில் வைத்து அந்தப் படுகொலை மேற்கொள்ளப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் அன்றைய தினம் சுட்டுக்கொல்லப்பட்டதுடன் அவரது மனைவி படுகாயம் அடைந்தார்.

அத்துடன் ஒரு கத்தோலிக்க கன்னியாஸ்திரியும் சுடப்பட்டார்.

கொலைதாரிகள் தப்பிச்செல்லும் போது திருப்பலியில் கலந்துகொண்டவர்களை நோக்கிச் சுட்டபடிதான் தப்பிச் சென்றார்கள்.

ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை விவகாரத்துடன் தொடர்புடைய கஜன் மாமா திடீர் மரணம்

ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை விவகாரத்துடன் தொடர்புடைய கஜன் மாமா திடீர் மரணம்

அதில் மரியாள் இணைப்பேராலய பாடகர் குழுவைச் சேர்ந்த ஐவர் படுகாயம் அடைந்தார்கள்.

மேலும் திருப்பலிப்பூசையில் கலந்துகொண்டிருந்த நான்கு கிறிஸ்தவர்கள் படுகாயம் அடைந்திருந்தார்கள்.

5 வருடங்கள் சிறை

2005 டிசம்பர் 25 அன்று அதிகாலை 1.20 இற்கு நடைபெற்ற அந்த அசம்பாவிதத்தில் பிள்ளையான் என்று அழைக்கப்படுகின்ற சிவனேசத்துரை சந்திரகாந்தன் சம்பந்தப்பட்டதாகக் குற்றம் சுமத்தபட்டு 5 வருடங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

புனித மரியாள் இணைப்பேராலயத்தில் இடம்பெற்ற அந்த படுகொலையில் பிள்ளையானுக்கு இருக்கின்ற தொடர்புகள் பற்றி நேரடிச் சாட்சியம் வழங்கியவர்கள் வேறு யாரும் அல்ல. அவருடன் கூட இருந்தவர்கள், அவரது உதவியாளர்கள்தான்.

ஐ.நா நிபுணர்களை வியக்க வைத்த அசாத் மௌலானா (Photos)

ஐ.நா நிபுணர்களை வியக்க வைத்த அசாத் மௌலானா (Photos)

அவர்களது சாட்சியங்களின் அடிப்படையில்தான் பிள்ளையான் கைதுசெய்யப்பட்டார்.

அப்படியிருக்க, எந்த மரியாள் இணைப்பேராலயத்தை பிள்ளையான் இரத்தத்தில் நனைத்தாரோ அதே பேராலயத்திற்கு பிள்ளையானை அழைத்து அவருக்கு மாவமன்னிப்பு வழங்கிய பங்குத் தந்தையின் செயல் அங்குள்ள கத்தோலிக்கர்களால் மிகுந்த கண்டனத்துக்கு உள்ளாகி வருகின்றது.

ஜனாதிபதி தேர்தல்

‘நடைபெற இருக்கின்ற ஜனாதிபதித் தேர்தலில் பிள்ளையானின் பேரம்பேசும் சக்தியை அதிகரிப்பதற்காகவே இதுபோன்ற நிகழ்ச்சிகள் திட்டமிட்டு ஏற்பாடுசெய்யப்பட்டதாகக்’ கூறுகின்றார் மட்டக்களப்பில் உள்ள ஒரு இளம் துறவி.

கிழக்கின் முக்கிய கொலைகள் மற்றும் கடத்தல்கள் தொடர்பில் அசாத் மௌலானா மேலும் பல அதிர்ச்சித் தகவல்கள்

கிழக்கின் முக்கிய கொலைகள் மற்றும் கடத்தல்கள் தொடர்பில் அசாத் மௌலானா மேலும் பல அதிர்ச்சித் தகவல்கள்


‘பிள்ளையானுக்கு மட்டக்களப்பில் கிறிஸ்தவர்களின் ஆதரவும் இருக்கின்றது என்பதைக் காண்பித்து, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுடன் பேரம்பேசும் நோக்குடன் மேற்கொள்ளப்படுகின்ற சதிக்கு சிலர் துணைபோய்விட்டதாகவும்’ அந்தத்துறவி கவலை வெளியிட்டார்.

பிள்ளையானுக்கு புனித மரியாள் இணைப் பேராலயத்தில் வரவேற்று வழங்கப்பட்டது பற்றி கருத்துவெளியிட்ட அந்த பங்கைச் சேர்ந்த ஒருவர், ‘பிள்ளையானை எதற்காக அழைத்தீர்கள் என்று நாங்கள் கேள்வி எழுப்பியதற்கு, பேராலய முன்றலுக்கு மண் போடுவதற்காகவென்று பதில் வழங்கப்பட்டது.

மட்டக்களப்பு கத்தோலிக்கத் தேவாலயத்திற்கு பிள்ளையானை அழைத்ததால் வெடித்தது பெரும் சர்ச்சை! | Controvercy Ove Pillayan Visit To St Maris Church

பேராலய முன்றல் என்று இவர்கள் கூறுவது வெறும் 100 சதுர மீற்றர் பகுதி மாத்திரம்தான். அங்கு உண்மையிலேயே மண் போடவேண்டிய தேவையே இல்லை. ஒருவேளை பிரச்சனை இருந்தால் கூட, பங்கைச் சேர்ந்த ஒவ்வொருவரும் ஒரு பிடி மண் அள்ளிப் போட்டால் கூட பிரச்சனை தீர்ந்துவிடும்.

பிள்ளையான் போன்ற கொலைக்குற்றம்சாட்டப்பட்டவரை அவர் கொலை செய்த கோவிலுக்கே அழைத்துவந்த பாவ மன்னிப்பு வழங்கிய எமது பங்குத் தந்தையின் செயலை கடவுள் கூட மன்னிக்கமாட்டார்’ என்று தெரிவித்தார். 

ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கில் பிள்ளையான் விடுதலை! சர்வதேச அமைப்பு கடுமையான விமர்சனம்

ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கில் பிள்ளையான் விடுதலை! சர்வதேச அமைப்பு கடுமையான விமர்சனம்

விசாரணைக்கு வருகின்றது ஜோசப் பரராஜசிங்கம், ரவிராஜ் படுகொலை விவகாரம்! அகப்படுவாரா பிள்ளையான்?

விசாரணைக்கு வருகின்றது ஜோசப் பரராஜசிங்கம், ரவிராஜ் படுகொலை விவகாரம்! அகப்படுவாரா பிள்ளையான்?

பிள்ளையான் விடுதலையின் பின்னணியில் வெளிவரும் பல இரகசியங்கள் (Video)

பிள்ளையான் விடுதலையின் பின்னணியில் வெளிவரும் பல இரகசியங்கள் (Video)

நன்றி நவிலல்

கருங்காலி சோலை, Bümpliz, Switzerland

21 Nov, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி மேற்கு, புத்தளம்

21 Dec, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, Toronto, Canada

18 Dec, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வேலணை கிழக்கு, பிரான்ஸ், France

10 Jan, 2016
மரண அறிவித்தல்
கண்ணீர் அஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

17 Dec, 2025
நன்றி நவிலல்

வட்டக்கச்சி, பேர்ண், Switzerland

18 Nov, 2025
28ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வவுனியா, கொழும்பு, நல்லூர்

08 Jan, 1997
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada

21 Nov, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், London, United Kingdom

10 Jan, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Fredericia, Denmark

21 Dec, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, மலேசியா, Malaysia, Toronto, Canada

18 Dec, 2020
மரண அறிவித்தல்

நல்லூர், திருநகர், பிரான்ஸ், France

15 Dec, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, North York, Canada

19 Dec, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, Markham, Canada

19 Dec, 2015
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

19 Dec, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டக்கச்சி, Rolleboise, France

21 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கலவெட்டித்திடல், பிரமந்தனாறு

29 Dec, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, வவுனிக்குளம், Meschede, Germany

18 Dec, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், செட்டிகுளம் வவுனியா

19 Dec, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, கொழும்பு, London, United Kingdom

26 Nov, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், குப்பிளான், பேர்ண், Switzerland

18 Dec, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US