இலங்கையில் முற்றாக தடை விதிக்கப்படலாம்: அரசாங்கத்தின் கடுமையான எச்சரிக்கை
பொலித்தீன் பைகளுக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் செய்வதில் அரசின் சுற்றுச்சூழல் துறைகள் கவனம் செலுத்தியுள்ளன.
சூப்பர் மார்க்கெட்களில் இலவசமாக வழங்கப்படும் பொலித்தீன் பைகளுக்கு குறிப்பிட்ட தொகையை வசூலிக்கலாம் என சமீபத்தில் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
அதன்படி, சிறிய, நடுத்தர மற்றும் பெரிய அளவிலான பொலித்தீன் பைகளுக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட உள்ளது.
இலவச பொலித்தீன் பைகள் விநியோகம்
இது தொடர்பான விதிமுறைகளை தயாரிக்கும் பணியை மத்திய சுற்றுச்சூழல் ஆணையம் மற்றும் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் தொடங்கியுள்ளன.
பல்பொருள் அங்காடியொன்று வாடிக்கையாளர்களுக்கு ஆண்டுக்கு ஒரு பில்லியன் இலவச பொலித்தீன் பைகளை வழங்குகின்றது.
மேலும் நாட்டில் ஆண்டுதோறும் சுற்றுச்சூழலில் வீசப்படும் மொத்த பொலித்தீன் பைகளின் அளவு சுமார் 200 கோடி ஆகும்.
பொலித்தீன் பைகளின் உற்பத்தி மற்றும் வர்த்தக தடை
இதற்கமைய, குறிப்பிட்ட பல்பொருள் அங்காடி ஒன்றினால் மட்டும் நாளாந்தம் வழங்கப்படும் பைகளின் தொகை 05 இலட்சம் ஆகும்.
சுற்றுச்சூழலை கடுமையாக பாதிக்கும் வகையில் பொலித்தீன் பைகள் உற்பத்தி செய்யப்பட்டால், வரும் ஆண்டில் பொலித்தீன் பைகளின் உற்பத்தி மற்றும் வர்த்தகத்தை தடை செய்வதிலும் அரசின் சுற்றுச்சூழல் துறைகள் கவனம் செலுத்தியுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 3 நாட்கள் முன்

பிரச்சனை கிளப்ப நினைத்த ரோஹினியால் மீனாவிற்கு கிடைத்த பரிசு... சிறகடிக்க ஆசை சீரியல் சூப்பர் புரொமோ Cineulagam

20 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன இளம் பெண்: பிரித்தானியாவில் கண்டெடுக்கப்பட்ட எச்சங்கள் News Lankasri

நடிகர் ரஜினிகாந்தின் போயஸ் கார்டன் வீட்டின் விலை மதிப்பு எவ்வளவு தெரியுமா? இவ்வளவு கோடியா! Cineulagam
