மத்திய அதிவேக நெடுஞ்சாலை நிர்மாண பணிகள் தொடர்பில் பெருந்தெருக்கள் அமைச்சு வெளியிட்டுள்ள தகவல்
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் கம்பஹா மாவட்டத்திற்கு உட்பட்ட நிர்மாண பணிகள் ஒரு போதும் இடை நிறுத்தப்பட மாட்டாது என பெருந்தெருக்கள் அமைச்சு அறிவித்துள்ளது.
அந்த அமைச்சின் செயலாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளார்.
கம்பஹா மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் முன்னெடுக்கப்படும் அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாண பணிகள் இடைநிறுத்தப்பட்டு மீள் ஆய்விற்கு பின்னர் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்திருந்தார்.
எனினும் குறித்த நிர்மாண பணிகள் இடைநிறுத்தப்பட மாட்டாது. கடவத்தை முதல் மீரிகமை வரையான நிர்மாண பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனவும் பெருந்தெருக்கள் அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.