அரசியலமைப்பு பேரவை இன்று கூடுகின்றது
புதிய பதில் பொலிஸ் மா அதிபருக்கான அங்கீகாரத்தை பெறுவதற்கு முன்னாள் சபாநாயகர் மகிந்த யாப்பா தலைமையிலான அரசியலமைப்புப் பேரவை இன்று (08.10.2024) கூடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பதில் பொலிஸ் மா அதிபராக பிரியந்த வீரசூரிய நியமிக்கப்பட்டிருப்பதற்கான அங்கீகாரத்தைப் பெற்றுக் கொள்ளும் வகையில் ஜனாதிபதியின் வேண்டுகோளின் பேரிலேயே அரசியலமைப்புப் பேரவை கூடவுள்ளது.
இலங்கை அரசியலமைப்பின் பிரகாரம் பதில் பொலிஸ் மா அதிபர் ஒருவர் 14 நாட்களுக்கு மேல் நியமிக்கப்படுவதாக இருப்பின், அதற்காக அரசியலமைப்புப் பேரவையின் அங்கீகாரம் பெற்றுக் கொள்ளப்பட வேண்டும்.
பிரியந்த வீரசூரிய
முன்னர் பொலிஸ் மா அதிபராக இருந்த தேசபந்து தென்னகோன், உச்சநீதிமன்ற இடைக்கால தீர்ப்பின் பிரகாரம் தனது பதவியை இழந்தார்.
இதனையடுத்து, அநுரகுமார திசாநயக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின்னர், பிரியந்த வீரசூரிய பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





இத்தனை கோடிக்கு விலை போய்யுள்ளதா மதராஸி படம்.. தமிழ்நாட்டில் மாஸ் காட்டிய சிவகார்த்திகேயன் Cineulagam

Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ Manithan

பிரித்தானியாவில் மகன் பிறந்து.,இரண்டு மாதங்களில் மாயமான 28 வயது தந்தை: காத்திருந்த அதிர்ச்சி News Lankasri

Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan

தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

குணசேகரனுக்கே செக் வைத்த தர்ஷன், ஜனனி கொடுத்த ஐடியா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
