தமிழ் நாடு சட்டமன்றத்தில் காங்கிரஸ் உறுப்பினர்கள் போராட்டம் நடத்த திட்டம்
தமிழ் நாடு சட்டமன்றத்திற்கு நாளை கறுப்பு உடை அணிந்து வர உள்ள காங்கிரஸ் உறுப்பினர்கள், இரவு முழுவதும் சட்டமன்றத்திற்குள் உள்ளிருப்பு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.
ராகுல்காந்தியின் நாடாளுமன்ற பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் நாளை இரவு (2023.03.26) சட்டமன்றத்தில் உள்ளிருப்பு போராட்டம் ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
முன்னதாக மோடியின் பெயர் குறித்து அவதூறு ஏற்படுத்தும் வகையில் பேசியதாக கூறி ராகுல் காந்திக்கு 2ஆண்டுகள் சிறைத்தண்டனையை குஜராத் நீதிமன்றம் வழங்கியது.
இதனையடுத்து மக்களவை ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தகுதிநீக்கம்
செய்ததுள்ளமை குறிப்பிடத்தக்கது.