கொழும்பில் கோவிட் அறிக்கையால் ஏற்பட்ட குழப்பநிலை
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்த பெண்ணின் சடலம் ஒன்றால் குழப் பநிலைமை ஏற்பட்டுள்ளது.
வேயன்கொட - உதம்ம பிரதேசத்தில் உயிரிழந்த பெண்ணின் சடலம் கும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டதன் காரணமாக குடும்ப உறுப்பினர்கள் மற்றும் மலர்ச்சாலை ஊழியர்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
உயிரிழந்த பெண் கடந்த 17ஆம் திகதி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சத்திர சிகிச்சைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் அவர் கொவிட் தொற்றுக்குள்ளாகவில்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.
சத்திர சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியவர் ஓரிரு நாட்களின் பின்னர் மீண்டும் சுகயீனமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மீண்டும் PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ள முடிவு வருவதற்கு முன்னர் அவர் உயிரிழந்துள்ளார்.
சடலம் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் குடும்பத்தினர், அவர்கள் மலர்ச்சாலையில் ஒப்படைத்துள்ளனர்.
இதன் போது குறித்த பெண்ணுக்கு கொவிட் தொற்று உறுதியாகியதாக மருத்துவ அறிக்கை கிடைத்தமையினால் பாரிய சர்ச்சையை நிலைமை ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தான், சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல் - இந்தியா சொந்தமாக உருவாக்கும் பாதுகாப்பு அமைப்பு News Lankasri
