கலவரத்தில் 27 கைதிகள் கொல்லப்பட்ட விவகாரம்! உயர் அதிகாரிக்கு மரண தண்டனை விதித்தது கொழும்பு மேல் நீதிமன்றம்
2012ஆம் ஆண்டு வெலிக்கடை விளக்கமறியல் சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரம் தொடர்பில் இன்றையதினம் ஒருவருக்கு மரண தண்டனை விதித்து கொழும்பு விசேட மேல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
சிறைச்சாலையில் இடம்பெற்ற அமைதியின்மையின் போது, 8 கைதி சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டது.
இந்த சம்பவம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில், சிறைச்சாலை ஆணையாளராக கடமையாற்றிய ஏமில் ரஞ்ஜன் லமாஹேவாவிற்கு மரண தண்டனை விதித்து, நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த பொலிஸ் பரிசோதகர் நியோமால் ரங்கஜீவ, விடுவித்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த அமைதியின்மையின் போது, 27 கைதிகள் உயிரிழந்திருந்தனர்.
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri
அப்பா, மனைவிக்கு கோடிக்கணக்கில் கடன்: தவெக தலைவர் விஜய்யின் முழு சொத்து மதிப்பு விவரம் News Lankasri