வைத்தியசாலையில் பெண்களின் சடலங்கள் மாறியமையினால் ஏற்பட்ட குழப்பநிலை
நிக்கவரெட்டிய வைத்தியசாலையில் இரண்டு பெண்களின் சடலங்கள் மாறியமையினால் பதற்றமான சூழ்நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது.
அந்தப் பகுதியை சேர்ந்த 67 வயதுடைய பெண் மற்றும் மஹவ பிரதேசத்தை சேர்ந்த 81 வயதுடைய பெண்ணின் சடலமே இவ்வாறு மாறியுள்ளது. 6
7 வயதுடைய பெண்ணின் சடலம் மஹவ பிரதேசத்தில் உயிரிழந்த பெண்ணின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர்கள் அந்த சடலத்திற்கு இறுதி அஞ்சலி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நிக்கவரெட்டிய பிரதேசத்தில் உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் வைத்தியசாலையில் சடலத்தை பெற வந்த சந்தர்ப்பத்தல் அது தங்கள் உறவினரின் சடலம் இல்லை என தெரிந்தவுடன் குழப்ப நிலை ஏற்பட்டது.
நிக்கவரெட்டிய பிரதேசத்தில் உயிரிழந்த பெண்ணின் உறவினர்களினால் வைத்தியசாலையில் இது தொடர்பில் உரிய பதில் ஒன்று கிடைக்கவில்லை என குற்றம் சும்தியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றும் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.