தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இழுபறி: தொடரும் சர்ச்சை
இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவுக்காக கட்சியின் மத்திய குழு கூட்டம் இடம்பெற்றது.
இதன்போது பொதுச் செயலாளர் தெரிவில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் குகதாசன் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சிறிநேசன் ஆகியோர் பொதுச்செயலாளர் பதவிக்காக போட்டியிட தீர்மானிக்கப்பட்டது.
இந்நிலையில் இலங்கை தமிழரசுக் கட்சியில் தலைமைத்துவத்தில் போட்டியிட்ட சட்டத்தரணி ஒருவரும் இதில் போட்டியிட முற்பட்ட போது அதில் குழப்பங்களை தவிர்ப்பதற்காக மத்திய குழு குகதாசனின் பெயரை ஏக மனதாக தீர்மானித்தது.
வாக்கெடுப்பிற்கான கலந்துரையாடல்
குறித்த தீர்மானம் பொதுச்சபைக்கு வந்த போது பொதுச்சபை உறுப்பினர்கள் குகதாசனின் பெயரை ஏக மனதாக ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவிக்கப்பட்டு வாக்கெடுப்பை கோரியிருந்தது.

எனினும் வாக்கெடுப்பிற்கான கலந்துரையாடலானது தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது.
வெளிநாட்டில் மூன்று நாட்களில் தாய் கிழவி படம் செய்துள்ள வசூல் சாதனை.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
காந்திமதியை வீட்டிற்கு அழைத்த முத்துவேல், நடந்தது என்ன?... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam
நிறுத்தாமல் அடிக்கும் ஈரான்... ஆயுதங்கள் பற்றாக்குறையால் தடுமாறவிருக்கும் இஸ்ரேலும் அமெரிக்காவும் News Lankasri