பொதுமக்களுக்கும் எரிபொருள் நிலைய ஊழியர்களுக்கும் இடையே முரண்பாடு (Photo)
எரிபொருள் நிலையத்தில் எரிபொருளுக்குத் காத்திருக்கும் பொது மக்களுக்கும், ஊழியருக்கும்
இடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
இச்சம்பவமானது இன்று(20) வவுனியா - ஓமந்தை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
மின்சாரம் தடைப்பட்டபோது எரிபொருள் விநியோகம் நிறுத்தப்பட்டதாகவும் நாளை எரிபொருள் விநியோகம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டதையடுத்து நீண்ட நேரம் காத்திருந்த மக்களுக்கும், ஊழியருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து போக்குவரத்துப் பொலிஸார் தலையிட்டு ஊழியரையும், பொதுமக்களையும்
சமாதானப்படுத்தியதையடுத்து மின்சாரம் வழமைக்குத் திரும்பியதும் எரிபொருள்
வழமைபோன்று விநியோகிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து பொதுமக்கள்
அமைதிக்குத் திரும்பினர்.