எனது ஆட்சியின் கீழ் பொலிஸ் திணைக்களம் சுயாதீனமானதாக்கப்படும் : அனுரகுமார
பொலிஸ் திணைக்களம் சுயாதீனமான நிறுவனமாக மாற்றப்படும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மஹரகமவில் நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
பொலிஸ் திணைக்களத்தின் அதிகாரிகளின் உரிமையாளர்களாக அரசியல்வாதிகள் இருக்கக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.
அரசியல் கைப்பாவைகள்
தமது ஆட்சியின் கீழ் எதிர்காலத்தில் பொலிஸ் திணைக்களம் மட்டுமன்றி ஒட்டு மொத்த அரச இயந்திரமும் அரசியல் கைப்பாவைகளாக செயற்படுவது தவிர்க்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொலிஸ் திணைக்களத்தின் சுயாதீனத்தன்மையையும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் கௌரவத்தையும் உறுதி செய்யக் கூடிய வகையில் ஆட்சி முன்னெடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரிகள் தேசிய மக்கள் சக்தியில் இணைந்து கொள்வதனை தடுக்கும் முனைப்புக்களில் ஐக்கிய மக்கள் சக்தியும், ஐக்கிய தேசியக் கட்சியும் ஈடுபட்டு வருவதாக அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

அமெரிக்கா, சீனாவின் மேலாதிக்கத்திற்கு அச்சுறுத்தல்: 3.5 பில்லியன் தங்கம் டெபாசிட் கண்டுபிடிக்கப்பட்ட நாடு News Lankasri

பாகிஸ்தான், சீனாவுக்கு மேலும் ஒரு கெட்ட செய்தி... ET-LDHCM ஏவுகணையை சோதிக்க தயாராகும் இந்தியா News Lankasri

சர்ச்சைகளுக்கு நடுவில் குட் நியூஸ் சொன்ன ரவிமோகன்.. ஆடிப்போன திரையுலகம்- குவியும் வாழ்த்துக்கள் Manithan

தக் லைஃப் படத்தில் சிம்பு ரோலில் முதன் முதலில் நடிக்கவிருந்த நடிகர் யார் தெரியுமா! அட இவரா Cineulagam
