ஆசிய அபிவிருத்தி வங்கி ஆளுநர்களின் மாநாடு: தலைவர் பதவி ரணிலுக்கு
ஆசிய அபிவிருத்தி வங்கி ஆளுநர்களின் 55ஆவது மாநாட்டிற்கு தலைமை தாங்குவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 28ஆம் திகதி பிலிப்பைன்ஸ் செல்லவுள்ளார்.
55ஆவது மாநாடு
இம்முறை இலங்கையில் நடைபெறவிருந்த ஆசிய அபிவிருத்தி வங்கி ஆளுநர்களின் 55ஆவது மாநாடு நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக பிலிப்பைன்ஸில் உள்ள மெனிலா நகரத்தில் நடைபெறுகின்றது.
எதிர்வரும் 26ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரையில் இந்த மாநாடு இடம்பெறவுள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் அங்கத்துவ நாடுகளின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் உள்ளிட்ட நிதி அமைச்சு அதிகாரிகள் குறித்த மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளனர்.
இலங்கைக்கு தலைமைத்துவம்
ஆசிய அபிவிருத்தி வங்கியானது 68 அங்கத்துவ நாடுகளை கொண்டுள்ளதுடன் ஆசியாவை சேர்ந்த அங்கத்தவர்கள் 49 பேரும் ஏனைய வெளி உறுப்பினர்கள் 19 பேரும் இதில் உள்ளடங்குகின்றனர்.
கடந்த 2016ஆம் ஆண்டு நிதி அமைச்சராக இருந்த முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் கோரிக்கைக்கு அமைவாக இம்முறை ஆசிய அபிவிருத்தி வங்கி ஆளுநர் மாநாட்டின் தலைமைத்துவம் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.
குறித்த மாநாடானது இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நடாத்தப்படுவதுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிதி அமைச்சராக இரண்டு வருடங்களுக்கு
தலைமை வகிப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 12 மணி நேரம் முன்

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

ஜாய் கிரிசில்டா பேச்சால் பல கோடி நஷ்டம்.. நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த மாதம்பட்டி ரங்கராஜ் Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
