நீதிமன்ற நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிக்க நிபந்தனைகளுடனான அனுமதி

Covid-19 Police Batticaloa Court
By Kumar Jul 09, 2021 07:33 AM GMT
Report

கோவிட் அச்சுறுத்தல் காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட நீதிமன்ற நடவடிக்கைகள் நேற்று முதல் வழமை நிலைக்குத் திரும்புவதாகவும் நீதிமன்றுக்கு வருவோர் சுகாதார நடைமுறைகளைப் பேணுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும் சட்டத்தரணிகள் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி பே.பிரேம்நாத் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டிலே ஏற்பட்டிருக்கின்ற கோவிட் தொற்று காரணமாகக் கடந்த இரண்டு மாதங்களாக நீதிமன்ற நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

நேற்று முன்தினம் நீதிச்சேவை ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டிருக்கின்ற சுற்றறிக்கை மூலமாகக் குறித்த நீதிமன்றங்களை நடத்துவதற்கான சில நிபந்தனைகளுடனான அனுமதி வழங்கப்பட்டிருக்கின்றது என்பதைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம், மேல் நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றம், களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்றம், ஏறாவூர் நீதவான் நீதிமன்றம் மற்றும் தொழில் நியாய மன்றிலே எவ்வாறான முறையில் பொதுமக்கள் வழக்குகளுக்காக உள்ளெடுக்கப்படவிருக்கின்றார்கள், எவ்வாறான முறையில் வழக்குகள் கையாளப்படவிருக்கின்றன என்பது தொடர்பிலே பொதுமக்களுக்குத் தெரிவிக்க வேண்டிய கடப்பாடு மட்டக்களப்பு சட்டத்தரணிகள் சங்கத்திற்கு ஏற்பட்டிருக்கின்றது.

குறித்த நீதிமன்றங்களுடைய பகுதிகளிலே நுழைவாயிலுக்கு அருகிலோ, உள்வீதிகளுக்குள்ளோ, நீதிமன்றக்கட்டிடங்களுக்குள்ளோ எந்தக் காரணம் கொண்டும் பொதுமக்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள். நீதிமன்ற நடவடிக்கைகளின் போது நீதவான் நீதிமன்றம் மற்றும் ஏனைய நீதிமன்றங்களிலே எடுக்கப்படுகின்ற விளக்க வழக்குகள் தொடர்பாக அனேகமான விளக்க வழக்குகள் நீதவான் நீதிமன்றத்திலே எடுப்பதற்கான சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன.

அந்த சந்தர்ப்பத்தில் அவ்வழக்கிற்குரிய எதிரிகளாகக் காணப்படுகின்றவர்கள் அல்லது சாட்சிக்காரர்கள் தங்களுடைய சட்டத்தரணிகள் மூலமாக அதனை உறுதிப்படுத்திக்கொண்டு நீதிமன்றத்திற்கு சமூகமளிக்க வேண்டிய தேவைப்பாடுள்ளவர்களாகக் காணப்படுகின்றார்கள்.

அழைக்கப்படுகின்ற வழக்குகளாகக் காணப்படுகின்ற போது அவர்கள் நீதிமன்றத்திற்குள் உள்வாங்கப்படமாட்டார்கள்.

அவர்கள் உள்வாங்கப்படவேண்டிய தேவை இருக்கின்றதா, இல்லையா என்ற விடயத்தினை அவர்கள் தங்களுடைய சட்டத்தரணிகளுக்கு தொலைபேசி மூலமாக அழைப்பினை ஏற்படுத்தி தனக்கு இந்தத் திகதியில் வழக்கு இருக்கின்றதென்றும் அதற்குத் தான் சமூகம் கொடுக்க வேண்டுமா என்ற விடயங்களைக் கேட்டு அதன் பின்னர் குறித்த விடயம் குறித்த நீதிமன்ற நீதிபதிக்குத் தெரிவிக்கப்பட்டு அதனூடாக உறுதிப்படுத்தப்பட்டு அதன்பின்னர் அவர்கள் நீதிமன்றத்திற்குள் அனுமதிக்கப்படுவார்களா என்ற விடயம் தீர்மானிக்கப்படும்.

அவ்வாறு அனுமதிக்கப்படுகின்ற வழக்கிற்குரியவர்கள் மாத்திரமே உள்வாங்கப்படுவார்கள். குறித்த வழக்குகளிலே தாபரிப்பு வழக்குகள், அவசரமாகக் கூட்டப்படவேண்டிய வழக்குகள் மற்றும் பிணை சம்பந்தமான வழக்குகள், குடும்ப வன்முறைகள் தொடர்பான வழக்குகள் சாதாரணமாகவே திறந்த நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

சுகாதார நடவடிக்கைகளை முற்று முழுதாக கட்டாயமாகப் பின்பற்ற வேண்டும் என்ற தேவைப்பாடு சகலருக்கும் இருக்கின்றது. முகக்கவசம் அணிந்து வரவேண்டும், கைகள் கழுவப்படவேண்டும் போன்ற முக்கியமான விடயங்கள் அனைத்தும் அங்கு பின்பற்றப்படவேண்டும்.

அவ்வாறு பின்பற்றாத நபர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகளும் அங்கு காணப்படுகின்றன. மாவட்ட நீதிமன்றங்களை பொறுத்த வரையிலும் எந்தெந்த வழக்குகள் அழைக்கப்படுகின்றன என்பது தொடர்பிலும் விளக்கத்திற்கு எடுக்கப்படுகின்றன என்பது தொடர்பிலும் இரண்டு சட்டத்தரணிகளும் கலந்தாலோசித்து மாவட்ட நீதிபதியினுடைய அனுமதி பெறப்பட்டு அதனூடாக அவ்வழக்குகள் எவ்வாறு கொண்டுசெல்லப்படவேண்டும் என்பது தீர்மானிக்கப்படும்.

இந்த சந்தர்ப்பத்தில் வழக்கிற்குரிய நபர்கள், எதிராளிகள் நிச்சயமாக தங்களுடைய சட்டத்தரணிகளுடன் தெலைபேசியில் தொடர்புகொண்டு அதற்கேற்ற வகையிலே தங்களுடைய பிரசன்னத்தை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

எக்காரணம் கொண்டும் எந்த சந்தர்ப்பத்திலும் பொதுமக்கள் கூடி நிற்பதற்கு இடமளிக்கப்படமாட்டாது. நீதவான் நீதிமன்றத்தைப் பொறுத்தவரையிலே விளக்க வழக்குகள் அழைக்கப்படுகின்றபோது அவ்வழக்குகளை எடுப்பதற்கான சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றது.

அவ்வாறான சூழ்நிலைகளில் தற்போது நாட்டிலிருக்கின்ற மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை காரணமாகக் கிழக்கு மாகாணத்தைத் தவிர்த்து வேறுமாகாணங்களிலிருந்து வரவேண்டிய எதிரிகளோ, சாட்சிகளோ இருப்பார்களானால் அவர்களுக்கு பிடிவராந்து பிறப்பிக்கப்படமாட்டாது.

ஆனால் கிழக்கு மாகாணத்திற்குள் இருந்துகொண்டு அவர்கள் விளக்க வழக்குகளுக்கு வரத்தவறுவார்களானால் அவர்களுக்கு பிடிவராந்து வழங்கப்படுவதற்கான சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றது.

இவற்றைத் தவிர்ப்பதற்காகக் குறித்த வழக்காளிகள் தங்கள் சட்டத்தரணிகளுடன் தொலைபேசி மூலமாகத் தொடர்புகொண்டு அவற்றை உறுதிப்படுத்திக் கொள்வதன் மூலமாக இந்த விடயங்களைத் தவிர்த்துக்கொண்டு அரசாங்கத்திற்கு ஒத்துழைத்து இந்த கொவிட் தொற்றிலிருந்து எம்மை பாதுகாத்துக் கொள்வோம் எனத் தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

தம்பிலுவில், இணுவில் மேற்கு, Kenton, United Kingdom, இணுவில் கிழக்கு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, அளவெட்டி தெற்கு

11 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரிக்காடு வல்வெட்டித்துறை, கிளிநொச்சி

24 May, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

Kopay South, கட்டைப்பிராய்

12 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, வவுனியா

10 Jun, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
மரண அறிவித்தல்

புத்தூர், கந்தர்மடம், India, Brampton, Canada

06 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மாதகல் வடக்கு, Jaffna, Viborg, Denmark

09 Jun, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், மல்லாகம், Lewisham, United Kingdom, Harrow, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை

23 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

03 Jun, 2026
மரண அறிவித்தல்

தேனி, India, சென்னை, India

10 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland, Toronto, Canada

10 Jun, 2021
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US