இலங்கையைச் சேர்ந்த மூன்று மாதக் குழந்தைக்கு சிக்கலான அறுவை சிகிச்சை
இலங்கையைச் சேர்ந்த மூன்று மாதக் குழந்தைக்கு தமிழகம் கோவையில் அண்மையில் சிக்கலான இதய அறுவை சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
அறுவை சிகிச்சை
சுவாசிப்பதில் சிரமம், குறைந்த எடை, அதிக வியர்வை மற்றும் பிறவியிலேயே இதய குறைபாடுகள் காரணமாக குழந்தை நீல நிறமாக மாறியிருந்தது.
சிசுவின் இதயத்தின் 3டி பிரதியைப் பயன்படுத்தி நிலைமையை ஆய்வு செய்த பின்னர், மருத்துவர்கள் சிக்கலான அறுவை சிகிச்சையை கடந்த அக்டோபர் 31ஆம் திகதி மேற்கொண்டுள்ளனர்.
வீடு செல்ல அனுமதி
அறுவை சிகிச்சைக் குழுவிற்கு, குழந்தை இருதய அறுவை சிகிச்சை நிபுணர் ஆர். விஜயகுமார் தலைமை தாங்கியுள்ளதாக தெரியவருகிறது.
மேலும் நவம்பர் 14ஆம் திகதி குழந்தை மருத்துவமனையில் இருந்து வீடு செல்ல
அனுமதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

பக்தி சூப்பர் சிங்கரில் மனைவி ஆசைக்காக பாட வந்த கணவர்.. அவே ஒரு சோம்பேறி- கலாய்த்து தள்ளிய பெண் Manithan

27 ஆண்டுக்கு முன்னர் நடந்த அதிசயம் - விமான விபத்தில் நடிகரின் உயிரை காப்பாற்றிய அதே 11A இருக்கை News Lankasri

விமானம் விழுந்த விடுதியில் 2 வயது பேத்தியுடன் காணாமல் போன தாய்.., கவலையுடன் தேடி அலையும் மகன் News Lankasri
