இஸ்ரேலில் உயிரிழந்த சுஜித் பண்டாரவுக்கு இழப்பீடு
இஸ்ரேல் - ஹமாஸ் மோதல்களால் உயிரிழந்த இலங்கையரான சுஜித் பண்டாரவுக்கு இழப்பீடு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த தகவலை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
யுத்தத்தில் உயிரிழந்த மக்களுக்கு இஸ்ரேல் அரசாங்கம் வழங்கி வரும் அனைத்து இழப்பீடுகள் மற்றும் கொடுப்பனவுகளை சுஜித் பண்டார குடும்பத்தினருக்கு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.
இழப்பீடு
வென்னப்புவ பிரதேசத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான சுஜித் பண்டார யடவர 2018 ஆம் ஆண்டு உதவியாளர் பணிக்காக இஸ்ரேலுக்கு சென்றிருந்தார்.

போரில் சுஜித் உயிரிழக்கும் போது அவருக்கு வயது 48 என தெரிவிக்கப்படுகின்றது.
தாக்குதலில் உயிரிழந்த சுஜித் பண்டார யடவரவின் சடலம் நேற்று (09.11.2023) காலை கட்டுநாயக்க விமான நிலைய ஊடாக இலங்கையை வந்தடைந்துள்ளது.
உயிரிழந்தவரின் இறுதிக்கிரியைகள் வென்னப்புவ, துலாவெல, மடவலப்பிட்டி பொது மயானத்தில் எதிர்வரும் சனிக்கிழமை (11.11.2023) இடம்பெறவுள்ளதாக அவரின் மனைவி ஜயனி மதுவந்தி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், உயிரிழந்த சுஜித் பண்டாரவுக்கு சாத்தியமான அனைத்து இழப்பீடுகளையும் கொடுப்பனவுகளையும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 10 மணி நேரம் முன்
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam