வெள்ளத்தால் சேதமடைந்த பயிர்களுக்கான இழப்பீடு குறித்து வெளியான அறிவிப்பு
வெள்ளத்தால் சேதமடைந்த பயிர்களுக்கான இழப்பீடு வழங்கப்படவுள்ளதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இழப்பீடு வழங்கும் பணி இன்று(29) முதல் ஆரம்பமாகும் என அந்த சபை தெரிவித்துள்ளது.
இந்த இழப்பீடு, பொலன்னறுவை, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் 13,376 ஏக்கர் சாகுபடி நிலங்களுக்கு முதல் கட்டமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இழப்பீடு
இதேவேளை 6,234 விவசாயிகளுக்கு 166.7 மில்லியன் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்று விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபைத் தலைவர் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக வானிலையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக, வெள்ளத்தால் விவசாய நிலங்கள் சேதமடைந்தன.
இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.





காஜல் அகர்வாலுக்கு என்னாச்சு.. போட்டோ பார்த்து அதிர்ச்சியில் ரசிகர்கள்! ஆனால் உண்மை இதுதான் Cineulagam

தீபாவளிக்கு சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ், கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகும் படங்கள்.. லிஸ்ட் இதோ Cineulagam

உன்னால ஒரு மண்ணும் செய்ய முடியாது தர்ஷன் கொடுத்த பதிலடி, குணசேகரனின் அடுத்த அதிரடி.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

ஹமாஸ் வசமிருந்த நான்கு பிணைக்கைதிகள் உடல்கள் மட்டுமே ஒப்படைப்பு: மீதமுள்ள உடல்கள் நிலை என்ன? News Lankasri
