கிளீன் ஸ்ரீலங்கா ஆளும் தரப்பில் இருந்தே ஆரம்பிக்க வேண்டும்: டி.வி. சானக சாடல்
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மக்கள் மீது வெறுப்புணர்வை காட்டக்கூடாது, மாறாக உண்மையான அமைப்பு மாற்றத்தைக் கொண்டுவருவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக(D. V. Chanaka) கோரியுள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்துரைத்துள்ள அவர்,
கிளீன் ஸ்ரீலங்கா(Clean Sri lanka) என்ற தூய்மையான இலங்கைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட திகதி குறித்து ஜனாதிபதி மற்றும் பல தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்த முரண்பாடான கருத்துக்கள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
தூய்மையான இலங்கை
அரசாங்கம் முச்சக்கர வண்டிகள் மற்றும் பேருந்துகளில் மாற்றியமைக்கப்பட்ட பாகங்களை அகற்றி வருகிறது. இருப்பினும், மக்கள் உண்மையான தூய்மைப்படுத்தலை விரும்புகிறார்கள்.
எனவே, 'தூய்மையான இலங்கை' திட்டம் தேசிய மக்கள் சக்தியிலிருந்தே ஆரம்பிக்கப்படல் வேண்டும்.
அது அவர்களின் கல்வித் தகுதிகள் குறித்து தவறான கூற்றுக்களை வெளியிடுபவர்களிடம் இருந்தே ஆரம்பிக்கவேண்டும் என்றும் டி வி சானக்க தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 4 நாட்கள் முன்

சீக்கிரமே திருமணம் செய்ய ஆசைப்படும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

எலோன் மஸ்க்கை தோற்கடித்து உலகின் மிகப்பெரிய நிறுவனம் ஒன்றை உருவாக்கியவர்... அவரது தொழில் News Lankasri
