வவுனியாவில் கணனி மயப்படுத்தப்பட்ட சமுர்த்தி வங்கி செயற்பாடுகள் ஆரம்பித்து வைப்பு
வவுனியாவில் நான்காவது சமுர்த்தி வங்கி நேற்றையதினம் கணனி மயப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கை பூராகவும் சமுர்த்தி வங்கிகள் கணனி மயப்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் அடிப்படையில் வவுனியா மாவட்டத்தில் செட்டிகுளம், நெடுங்கேணி, ஓமந்தை சமுர்த்தி வங்கிகள் கணனி மயப்பட்டுத்தப்பட்டதன் பின்னர் நேற்றையதினம் பாவற்குளம் வங்கி கணனி மயப்பட்டுத்தப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்ட சமுர்த்தி திணைக்களப்பணிப்பாளர் திருமதி ச. பத்மரஞ்சன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் செட்டிகுளம் பிரதேச செயலாளர் க. சிவகரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்தார்.
இந்நிகழ்வில் சமுர்த்தி தலைமை அதிகாரிகள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், வங்கியின் வாடிக்கையாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.




