வருடத்தில் அத்தனை நாட்களும் நினைவேந்தல் நடத்தப்பட வேண்டும்: அருட்தந்தை மா.சக்திவேல்
தமிழர் தாயகத்தை மீட்க களப்பலியானவர்களுக்காகவும், உயிர் தியாகமானோருக்காகவும் வருடத்தில் அத்தனை நாட்களும் நினைவேந்தல் நடத்தப்பட வேண்டும் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்துள்ளார்.
அவரால் நேற்று(23.09.2022) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நிறைவேற்றப்படாத கோரிக்கைகள்
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,“திலீபன் நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக நடந்து கொண்டிருக்கின்றன. அவர் என்ன கோரிக்கைகளை முன்வைத்து உயிர் தியாகமானாரோ அந்தக் கோரிக்கைகள் அன்றும் நிறைவேற்றப்படவில்லை. இன்றும் நிறைவேற்றப்படாதது மட்டுமல்ல தமிழர் தாயகத்தின் திருகோணமலை திருகோணேஸ்வர கோவில் பிரதேசத்தையும், குருந்தூர் மலை பிரதேசத்தையும் ஆக்கிரமிக்கும் செயற்பாடு ஐ.நா மனித உரிமை பேரவை நடத்திக் கொண்டிருக்கின்றது.
இந்த சூழ்நிலையிலும் தொடர்ந்து கொண்டிருப்பது ஒட்டுமொத்த இன அழிப்பிற்குமான பொது கட்டமைப்பு உருவாக்கத்தின் தேவையை உணர்த்தி நிற்கின்ற சூழ்நிலையில் திலீபன் நினைவுசுடர் ஏற்றும் பொது கட்டமைப்பு என ஒரு சிலரை கூட்டுவது நினைவேந்தலுக்கு மட்டுமல்ல தமிழர் தியாகத் தீபம் திலீபனுக்கே அவமானத்தையே ஏற்படுத்தும்.
நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு
நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு என்பது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல், மாவீரர் நாள் நினைவேந்தல், புனித நவாலி நினைவேந்தல், நாகர்கோவில், செஞ்சோலை அனைத்திற்கும் அனைத்து மக்களையும், அனைத்து ஊர்களையும் இணைத்து உருவாக்குதல் வேண்டும். இத்தகைய நினைவேந்தல்கள் அவர் ஊருக்கும் ஊரவர்களுக்கும் மட்டும் சொந்தமானதல்ல.
பொது கட்டமைப்பு பிரதான நினைவேந்தல் சார்பாகவும் தமிழர் தாயகத்தை உள்ளடக்கியதாகவும் உருவாக்க வேண்டும்.
பிரதேச ரீதியில் நடத்தும் நினைவேந்தல்களை கிரகமாக நடத்துவதற்கும் பொது நினைவேந்தல்களை வழி நடாத்துவதற்கும் பொது கட்டமைப்பு செயல்பட வேண்டும் அதன் மூலமே தமிழர் தாயகத்தை நினைவேந்தல் ரீதியிலும், அரசியல் ரீதியிலும் உயிர்ப்புடன் வைத்திருக்க முடியும்.
தமிழர்களின் விடுதலை
தமிழர்களின் விடுதலை காண அனைத்து ரத்தம் சிந்துதல்களிலும் திலீபனின் கோரிக்கை அடங்கியுள்ளது. அதனை இன்றைய நிலையில் அரசியல் ரீதியில் கூர்மைமைப்படுத்தி மக்களை திரட்சிக்கொள்ள செய்தல் வேண்டும்.
இதற்கு பிரதேச நினைவேந்தல்கள் முக்கியம். அதுவே முழுமையான பொது நினைவேந்தலுக்கு பெரும் சக்தியாக அமையும்.
ஆனால் நினைவேந்தல் காலத்தில் மட்டும் பொதுக் கட்டமைப்பு பற்றி சிந்திப்பதும், கூட்டம் கூடுவதும், அதனை தனிப்பட்ட அரசியலாக்குவதும், நித்திரை விழித்தவர்கள் போல் பிதற்றுவதும் இன அழிப்பாளர்களின் கைக்கூலி செயற்பாடாகும்.
ஐ.நா மனித உரிமை பேரவையும் அதன் உறுப்பு நாடுகளும் தமது புவிசார் அரசியல் நலன் கருதி தமிழர்களுக்கு எதிராக மிக நீண்ட காலமே துரோகம் செய்து வந்துள்ளது என்பதை நாம் அறிவோம்.
இதனை தோற்கடிக்க பொது கட்டமைப்பு தேவையாக உள்ளது. இதனை
கருத்தில் கொண்டு பொது கட்டமைப்பு தொடர்பாக சிந்தித்தல் வேண்டும்.