மண்டைதீவு கடலில் படுகொலை செய்யப்பட்ட கடற்றொழிலாளர்களின் நினைவு தினம்
மண்டைதீவு கடலில் படுகொலை செய்யப்பட்ட 31 கடற்றொழிலாளர்களின் 38ஆவது ஆண்டு நினைவு தினம் யாழில் (Jaffna) அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
குறித்த நினைவுதின அஞ்சலி நிகழ்வானது யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட 31 கடற்றொழிலாளர்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபியில் இன்று (10.06.2024) இடம்பெற்றுள்ளது.
இந்த அஞ்சலி நிகழ்வில் படுகொலை செய்யப்பட்ட கடற்றொழிலாளர்களின் உறவினர்கள், கிறிஸ்தவ மதகுருமார்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு கொல்லப்பட்ட கடற்றொழிலாளர்களுக்காக வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் அவர்களுக்கு அஞ்சலியும் செலுத்தியுள்ளனர்.
படுகொலை
1986ஆம் ஆண்டு ஜுன் மாதம் 10ஆம் திகதி குருநகர், இறங்குதுறையில் இருந்து கடற்றொழிலுக்கு சென்ற கடற்றொழிலாளர்கள் 31 பேரும் மண்டைதீவு கடலில் வைத்து கடற்படையினரால் படுகொலை செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





குணசேகரன் மற்றும் அவரது அம்மா திட்டத்தை தெரிந்துகொண்ட ஜனனி.. எதிர்நீச்சல் சீரியல் அடுத்த அதிரடி புரொமோ Cineulagam

Optical illusion: உங்கள் கண்களை ஒரு நிமிடம் குருடாக்கும் மாயை...இதில் இருக்கும் இலக்கம் என்ன? Manithan

இன்று விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே திருமணம் முடிந்தது.. புதிய ஜோடியின் போட்டோ இதோ Cineulagam

என்ன கொடுமை இது, நான் சீரியல் பார்ப்பதை நிறுத்திவிட்டேன்.. எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்கள் புலம்பல் Cineulagam
