வெருகலில் 41ஆம் ஆண்டு வட்டவன் படுகொலை நினைவேந்தல்: நீதிக்காக ஏங்கும் உறவுகள் அஞ்சலி

Trincomalee Death
By Kiyas Shafe Jun 03, 2026 01:24 PM GMT
Report

திருகோணமலை மாவட்டத்தின் வெருகல் பிரதேசத்திற்குட்பட்ட வட்டவன் கிராமத்தில், கடந்த 1985ஆம் ஆண்டு அரங்கேற்றப்பட்ட கொடூர கூட்டுப் படுகொலையின் 41ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (03) உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

வட்டவன் படுகொலை நினைவேந்தல் பகுதியில் திரண்ட உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணையில் மற்றுமொரு திருப்பம்! சிஐடியினருக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணையில் மற்றுமொரு திருப்பம்! சிஐடியினருக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

 நீதிக்காக ஏங்கும் உறவுகள்

இலங்கையின் உள்நாட்டுப் போர்ச் சூழலில், திருகோணமலை மாவட்டத்தின் எல்லைக் கிராமமான வெருகல் பிரதேசம் சொல்லொணாத் துயரங்களையும், இடப்பெயர்வுகளையும், உயிரிழப்புகளையும் சந்தித்த ஒரு பகுதியாகும்.

இதில் மிகக் கொடூரமான வடுவாக 1985ஆம் ஆண்டு ஜூன் மாதம் 3ஆம் திகதி நிகழ்ந்த வட்டவன் கூட்டுப் படுகொலை பார்க்கப்படுகிறது.

வெருகலில் 41ஆம் ஆண்டு வட்டவன் படுகொலை நினைவேந்தல்: நீதிக்காக ஏங்கும் உறவுகள் அஞ்சலி | Commemoration 41St Anniversary Vatavan Massacre

கடந்த 1985 ஜூன் 3 அன்று வெருகல் பிரதேசத்திற்குள் நுழைந்த ஆயுதம் தாங்கிய குழுக்கள் மற்றும் பாதுகாப்புப் படையினருடன் தொடர்புடையதாகக் கூறப்படும் தரப்பினரால், இப்பகுதியின் பல கிராமங்கள் குறிவைத்துத் தாக்கப்பட்டன.

ஆரிப்பு, பூநகர், பூமரத்தடிச்சேனை, மாவடிச்சேனை, முத்துச்சேனை, வாழைத்தோட்டம் மற்றும் வட்டவன் உள்ளிட்ட பல கிராமங்கள் இதன்போது அடித்து நொறுக்கப்பட்டு, தீக்கிரையாக்கப்பட்டதாக உயிர் பிழைத்தவர்கள் இன்றும் அச்சத்துடன் நினைவு கூருகின்றனர்.

இக்கோரத் தாக்குதல்களால் பீதியடைந்த மக்கள், தங்களின் உயிர்களைக் காத்துக் கொள்ள உடமைகளைத் துறந்து அடர்ந்த காடுகளுக்குள் தஞ்சமடைந்தனர்.

இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்திய திறைசேரி அதிகாரியின் மரணம்! உயிர்மாய்ப்பென இறுதி முடிவு

இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்திய திறைசேரி அதிகாரியின் மரணம்! உயிர்மாய்ப்பென இறுதி முடிவு

நினைவேந்தல் நிகழ்வு

எனினும், வட்டவன் கிராமத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சிலரும், அவர்களது நெருங்கிய உறவினர்களும் அக்கணத்தில் தப்பிச் செல்ல முடியாமல் கிராமத்திற்குள்ளேயே சிக்கிக் கொண்டனர். கர்ப்பிணித் தாய், சிறுவர்கள் உட்பட 10 பேர் கொடூரமாகக் கொலை தாக்குதல்காரர்களிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் நோக்கில், அவர்கள் அனைவரும் ஒரு வீட்டிற்குள் தஞ்சமடைந்திருந்தனர்.

வெருகலில் 41ஆம் ஆண்டு வட்டவன் படுகொலை நினைவேந்தல்: நீதிக்காக ஏங்கும் உறவுகள் அஞ்சலி | Commemoration 41St Anniversary Vatavan Massacre

எனினும், அங்கு புகுந்த ஆயுததாரிகள், உள்ளே இருந்தவர்களை மிகக் கொடூரமான முறையில் வெட்டியும் சுட்டும் படுகொலை செய்ததுடன், அவர்களின் உடல்களையும் அங்கேயே எரித்து சாம்பலாக்கியதாக அப்பகுதி மக்கள் கண்ணீருடன் தெரிவித்தனர்.

இந்த மனிதாபிமானமற்ற கொடூரச் சம்பவத்தில் ஒரு கர்ப்பிணித் தாய், இரண்டு சிறுவர்கள், மூன்று பெண்கள் மற்றும் நான்கு ஆண்கள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 அப்பாவிப் பொதுமக்கள் துடிதுடிக்கக் கொல்லப்பட்டனர்.

படுகொலை செய்யப்பட்டவர்களின் விபரம்:

சுபத்திரை (கர்ப்பிணித் தாய்)

கார்த்திகேசு

கார்த்திகேசு கனகம்மா

ரங்கராசா அமராவதி

ரங்கராசா ராசா 

ரங்கராசா சரஸ்வதி

கேதுபாலுப்பிள்ளை 

அன்னக்கிளி 

சின்னையா கிட்ணப்பிள்ளை 

இராசையர் (ஓடாவியார்)

இன்று நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வின் போது, படுகொலை செய்யப்பட்ட சுடர்களின் உருவப்படங்களுக்கு சுடரேற்றி, மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன், இரண்டு நிமிட மௌன அஞ்சலியும் அனுஷ்டிக்கப்பட்டது.

தங்கள் கண்முன்னே உறவுகளைப் பறிகொடுத்து 41 ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும், இதற்குக் காரணமானவர்களுக்கு எதிராக இதுவரை எந்தவொரு சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என உறவுகள் இதன்போது ஆதங்கம் வெளியிட்டனர்.

போரினால் பாதிக்கப்பட்ட தங்களுக்கு உண்மையும் நீதியும் நிலைநாட்டப்பட வேண்டும் என்பதை சர்வதேசமும் அரசாங்கமும் உறுதி செய்ய வேண்டும் என நினைவேந்தலில் கலந்துகொண்ட மக்கள் வலியுறுத்தினர்.

செம்மணி அகழ்வில் நெஞ்சை உலுக்கும் கொடூரம்.! ஒன்றன் மீது ஒன்றாக எலும்புக்கூடுகள் மீட்பு..

செம்மணி அகழ்வில் நெஞ்சை உலுக்கும் கொடூரம்.! ஒன்றன் மீது ஒன்றாக எலும்புக்கூடுகள் மீட்பு..

tri

GalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

இணுவில், Neuss, Germany, Markham, Canada

30 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
அகாலமரணம்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இறுப்பிட்டி, கொழும்பு, யாழ்ப்பாணம்

26 May, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Luton, United Kingdom, Toddington, United Kingdom, Milton Keynes, United Kingdom

02 Jun, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

02 Jun, 2013
மரண அறிவித்தல்

காரைநகர், யாழ்ப்பாணம், Toronto, Canada

31 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, இளவாலை

02 Jun, 2016
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

01 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், மாங்குளம், Amsterdam, Netherlands, Nuremberg, Germany

01 Jun, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஸ்கந்தபுரம், வவுனியா

01 Jun, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

30 May, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

22 May, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US