நாட்டில் நிலுவையில் உள்ள வெளியேற்றுதல் உத்தரவு: நீதியமைச்சர் வெளியிட்ட தகவல்
நிலுவையில் உள்ள அனைத்து வெளியேற்றுதல் (Eviction) உத்தரவுகள் நடைமுறைபடுத்தப்பட்டால், கொழும்பு மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் வீடற்றவர்களாகி விடுவார்கள் என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அண்மையில் நீதிமன்ற உத்தரவின் பேரில் இடம்பெற்ற வெளியேற்றுதல் குறித்து தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் லக்மாலி ஹேமச்சந்திர தெரிவித்த கருத்து தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை குறித்து பதிலளிக்கும்போதே அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.
கொழும்பில் இடம்பெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின்போது, நாரஹேன்பிட்டியிலுள்ள அரச காணிகளில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை வெளியேற்றக்கோரும் நீதிமன்ற உத்தரவை நடைமுறைபடுத்த வேண்டாம் என்று அதிகாரி ஒருவரை லக்மாலி ஹேமச்சந்திர வலியுறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டில் நிலுவையில் உள்ள வெளியேற்றுதல் உத்தரவு
இந்த விவகாரம் நீதிமன்ற அவமதிப்பாக அமையாது என்று ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கருத்து தெரிவிக்கும்போது அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், நாட்டில் நிலுவையில் உள்ள அனைத்து வெளியேற்றுதல் உத்தரவுகளும் நடைமுறைபடுத்தப்பட்டால், ஒரு பெரியளவிலான மக்கள் வீடற்றவர்களாகி விடுவார்கள் என்ற கருத்தை அவர் வலியுறுத்தியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
விந்தணுக்கள் மூலம் Super Race மனித இனத்தை உருவாக்க திட்டமிட்ட எப்ஸ்டீன்: வெடித்துள்ள புதிய சர்ச்சை News Lankasri