கொழும்பு மாநகரசபையின் மேயர் தொடர்பில் வெளியான தகவல்
கொழும்பு மாநகர சபையின் மேயராக வ்ரே கெலி பால்தசார் (Vraie Cally Balthazaar) இருப்பார் என்று வேளாண்மை, கால்நடை, நிலம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால் காந்த தெரிவித்துள்ளார்.
கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் லால் காந்த, கொழும்பு மாநகர சபையில் ஏற்கனவே அதிகாரத்தை நிலைநாட்டியுள்ளதாகவும், மேயர் நியமனத்தையும் இறுதி செய்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
மேலும், கொழும்பு மாநகர சபைக்கான மேயர் தொடர்பில் சம்பிரதாயங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மட்டுமே வெளிவர உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தேசிய மக்கள் சக்தி (NPP) மற்ற அரசியல் பிரிவுகளுடன் கைகோர்த்து அதன் விரிவாக்கத்தைத் தொடரும் என்றும் அமைச்சர் லால் காந்த கூறியுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி, பல பிரிவுகளுடன் இணைந்து பணியாற்றியதாகவும், எனவே உள்ளாட்சித் தேர்தலும் வேறுபட்டதல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

படங்களில் வில்லன் வாழ்க்கையில் ஹீரோ.. கோட்டா ஶ்ரீனிவாச ராவ் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? Manithan

பிரித்தானியாவில் புறப்பட்ட சிறிது நேரத்தில் வெடித்துச் சிதறிய விமானம்! உள்ளே இருந்தவர்களின் கதி? News Lankasri

பிடிவாதத்தால் எதையும் சாதிக்கும் பெண் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

குடும்பத்தினருக்கு பேரதிர்ச்சி கொடுக்கும் உண்மையை கூறிய அரசி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு புரொமோ Cineulagam
