கொழும்பில் காடுகளாக மாறும் சொகுசு பங்களாக்கள்
கொழும்பில் உள்ள அமைச்சர்களுக்கான சொகுசு பங்களாக்களில் தற்போது காடுகள் போல மாறிவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து கிட்டத்தட்ட ஏழு மாதங்களுக்கு மேல் ஆகியும், கொழும்பில் உள்ள அமைச்சர்களுக்கான பங்களாக்கள் தொடர்பில் எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் குற்றம் சுமத்தப்படுகின்றது.
எவ்வித முடிவும் இல்லை..
இந்த நிலையில், குறித்த பங்களாக்கள் பலவற்றில் காடு மண்டி, சீர் செய்யப்படாமல் காடுகள் போல தோற்றமளித்து வருவதாகவும் சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இது குறித்து, பொதுநிர்வாக அமைச்சர் சந்தன அபயரத்ன குறிப்பிடுகையில், இந்த சொகுசு பங்களாக்கள் தொடர்பில் இதுவரை எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.
மேலும், குறித்த சொகுசு பங்களாக்களை வாடகைக்கு பெற்றுக் கொள்ள பல நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் முன்வந்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மஹா சிவராத்திரி 2026 நேரலை
கும்பத்தில் சனி, சூரியன் சேர்க்கை... இந்த 3 ராசியினர் ஜாக்கிரதை! எச்சரிக்கும் ஜோதிட நிபுணர்கள் Manithan
12 மாதங்களின் பின் கும்பத்தில் உருவாகும் சுக்ராதித்ய ராஜயோகம்: டபுள் ஜாக்பாட் இந்த 3 ராசிக்கு தான்! Manithan