நாமல் குமாரவின் முறைப்பாடு தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரிக்கை

Cardinal Malcolm Ranjith Easter Attack Sri Lanka Rajapaksa Family
By Amal Dec 29, 2024 11:55 PM GMT
Report

கர்தினால் மல்கம் ரஞ்சித்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சமூக ஊடகங்களில் பரவி வரும் குரல் பதிவு தொடர்பாக சமூக ஆர்வலர் நாமல் குமார, அண்மையில் மேற்கொண்ட முறைப்பாட்டை விசாரிக்குமாறு கொழும்பு மறைமாவட்டம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஊடகங்களிடம் நேற்று(29.12.2024) இது தொடர்பாக கருத்துக்களை பகிர்ந்துக்கொண்ட மறைமாவட்டத்தின் ஊடக இயக்குநர் அருட்தந்தை ஜூட் கிரிசாந்த, உயிர்த்த ஞாயிறு படுகொலைகளுக்கு செயற்பாட்டாளர் நாமல் குமார ஒரு தூண்டுதலாக இருப்பதாகவும், ஒரு குறிப்பிட்ட மூன்றாம் தரப்பினரின் வேண்டுகோளின் பேரில் அவர் மற்றொரு காட்சியைத் திட்டமிடுவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

2024 டிசம்பர் 24 அன்று, செயற்பாட்டாளர் நாமல் குமார ஜனாதிபதி செயலகம் மற்றும் குற்றப் புலனாய்வுத் துறை ஆகியவற்றில் முறைப்பாடுகளை செய்துள்ளார். கர்தினால் ரஞ்சித்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் குரல் பதிவு ஒன்று ஊடகங்களில் பரப்பப்படுவதாக அவர் தமது முறைப்பாட்டில் தெரிவித்திருந்தார்.

எமது அரசு கூட்டுறவு துறையை வலுப்படுத்தும் - இளங்குமரன் எம்.பி நம்பிக்கை

எமது அரசு கூட்டுறவு துறையை வலுப்படுத்தும் - இளங்குமரன் எம்.பி நம்பிக்கை

வேண்டுமென்றே செய்யப்பட்ட முயற்சி

இந்தநிலையில், முழு கத்தோலிக்க சமூகத்தின் சார்பாகவும், செயற்பாட்டாளர் நாமல் குமார, கர்தினாலுக்கு எதிராக மேற்கொண்ட இந்த முறைப்பாட்டை கண்டிப்பதாக அருட்தந்தை ஜூட் கிரிசாந்த தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வரும் இந்த குரல் பதிவு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவினுடையது என்று நம்பப்படுகிறது.

நாமல் குமாரவின் முறைப்பாடு தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரிக்கை | Colombo Archdiocese Calls For Probe Namal Kumara

எனவே, இது நாமல் குமாரவின் நோக்கத்தினாலோ அல்லது மூன்றாம் தரப்பினரின் வேண்டுகோளினாலோ கர்தினாலின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வேண்டுமென்றே செய்யப்பட்ட முயற்சி என்று தாம் கருதுவதாக அருட்தந்தை குறிப்பிட்டுள்ளார்.

சஹ்ரானின் நடவடிக்கைகள் குறித்து விசாரித்து வந்த பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் முன்னாள் இயக்குநர் பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா, ஏதோ ஒரு அபத்தமான குற்றச்சாட்டின் பேரில் திடீரென சிறையில் அடைக்கப்பட்டார்.

ராஜபக்ச குடும்பத்தின் செயல்கள்

இதுவே உயிர்த்த ஞாயிற்றுக்கிழமை கொடிய குண்டுவெடிப்புத் தாக்குதல்களுக்கு வழிவகுத்தது. உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பைச் செயல்படுத்துவதற்காகவே நாலக சில்வா தடுத்து வைக்கப்பட்டார் என்பது தெளிவாகிறது.

அத்துடன் இந்த பணியின் முக்கிய தலைவராக நாமல் குமாரவே செயற்பட்டுள்ளார் என்று அருட்தந்தை தெரிவித்துள்ளார்.

நாமல் குமாரவின் முறைப்பாடு தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரிக்கை | Colombo Archdiocese Calls For Probe Namal Kumara

இவை அனைத்தையும் கணக்கில் எடுத்துக் கொண்டால், நாமல் குமார வேறொரு சம்பவத்தைத் திட்டமிட யாரையாவது தூண்டுகிறார் என்பது தெளிவாகிறது என்றும், இவை ராஜபக்ச குடும்பத்தின் சில செயல்களாக தாம் கருதுவதாகவும் அருட்தந்தை கிரிசாந்த தெரிவித்துள்ளார்.

எனவே, நாமல் குமார எழுப்பிய இந்தக் குற்றச்சாட்டுகள் கர்தினால் ரஞ்சித்தின் நற்பெயருக்கு தீங்கு விளைவித்துள்ளதால், விசாரணையைத் தொடங்கி நீதியை நிலைநாட்டுமாறு பொலிஸ் மா அதிபரை கேட்டுக்கொள்வதாக அருட்தந்தை ஜூட் கிரிசாந்த கோரிக்கை விடுத்துள்ளார். 

தமிழ் ஊடகத்துறை மீது தொடரும் அச்சுறுத்தல்: ஜனாதிபதியிடம் வலியுறுத்து

தமிழ் ஊடகத்துறை மீது தொடரும் அச்சுறுத்தல்: ஜனாதிபதியிடம் வலியுறுத்து

2025 ஜனவரி முதலாம் திகதி முதல் பொதுச்சேவை உறுதிமொழியில் திருத்தம்

2025 ஜனவரி முதலாம் திகதி முதல் பொதுச்சேவை உறுதிமொழியில் திருத்தம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US