தமிழ் ஊடகத்துறை மீது தொடரும் அச்சுறுத்தல்: ஜனாதிபதியிடம் வலியுறுத்து

Jaffna Kilinochchi Journalists In Sri Lanka
By Kajinthan Dec 29, 2024 07:53 PM GMT
Report

கிளிநொச்சி(Kilinochchi) மாவட்டத்தின் சுயாதீன ஊடகவியலாளர் மு.தமிழ்ச்செல்வனை கடத்த முயற்சித்த நிலையில் அவர் மீது கடுமையான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமையானது தொடரும் அச்சுறுத்தல் நிலையின் வெளிப்பாடாகவே அமைந்துள்ளது என வடமராட்சி ஊடக இல்லம் தெரிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றின் மூலம் இதனை வடமராட்சி ஊடக இல்லம் குறிப்பிட்டுள்ளது.

உலகின் பழமையான மொழி தமிழ்: இந்திய பிரதமர் மோடி பெருமிதம்

உலகின் பழமையான மொழி தமிழ்: இந்திய பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ் ஊடகத்துறை

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

தமிழ் ஊடகத்துறை மீது தொடரும் அச்சுறுத்தல்: ஜனாதிபதியிடம் வலியுறுத்து | Tamil Media Threat In Sri Lanka

சமூக மட்டத்திலும் நிர்வாக கட்டமைப்புகளிலும் இடம்பெற்று வரும் பல்வேறு சமூக விரோத செயற்பாடுகள், முறைகேடுகளை பகிரங்கமாக ஊடக அறிக்கையிடல் மூலம் வெளிப்படுத்தி வரும் மு.தமிழ்ச்செல்வன் மீது கிளிநொச்சி நகரில் ஏ-9 நெடுஞ்சாலையில் வைத்து பட்டப்பகலில் மேற்கொள்ளப்பட்ட கடத்தல் மற்றும் தாக்குதல் முயற்சி சட்டம் ஒழுங்கை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

போர் காலத்திலும் அதன் பின்னரும் தமிழ் ஊடகத்துறை ஆயுத முனையில் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டும், அதன்காரணமாக பல ஊடகவியலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டும், கடத்தப்பட்டு சடலங்களாக வீசப்பட்டும், காணாமல் ஆக்கப்பட்டும் வந்துள்ளனர்.

ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட பின்னரான காலத்தில் தமிழர் தாயகத்தில் வன்முறை கலாசாரம் திட்டமிட்டு ஊக்குவிக்கப்பட்டு வருவதும் அதன் பின்னணியில் போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் சமூகவிரோத செயற்பாடுகள் சமூகமயப்படுத்தப்பட்டு வருகின்றன.

ஆட்சி அதிகாரத்தில் உள்ளோரால் இவை கண்டும் காணாமல் விடப்படுகின்றமையும் அதற்கு காரணமாணவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படாது பாதுகாக்கப்பட்டு வருகின்றமையும் ஆட்சிகள் மாறினாலும் மாற்றமேதுமின்றி தொடர்கின்றமையானது அந்நிலையை மேலும் ஊக்குவிப்பதாகவே இருந்து வருகின்றமை எந்நிலையிலும் மறுக்கவே முடியாத பேருண்மையாகும்.

இலங்கையின் மூத்த தமிழ் படைப்பாளர் யோகேந்திரநாதன் இன்று காலமானார்

இலங்கையின் மூத்த தமிழ் படைப்பாளர் யோகேந்திரநாதன் இன்று காலமானார்

பாரிய அச்சுறுத்தல்

இவ்வாறான நிலையில், முன்னைய காலங்களில் ஆயுத முனைகளால் பேச முடியாதவற்றை தற்காலத்தில் வன்முறைச் சம்வங்கள் மூலமாக தமிழ் ஊடகத்துறையை மௌனிக்கச் செய்யும் உச்சபட்ட அடக்குமுறை செயற்பாடுகள் தீவிரம் பெற்றுள்ளன.

தமிழ் ஊடகத்துறை மீது தொடரும் அச்சுறுத்தல்: ஜனாதிபதியிடம் வலியுறுத்து | Tamil Media Threat In Sri Lanka

இவ்வாறான நிலையில் நிகழ்ந்துள்ள இத்தாக்குதலானாது ஊடக சுதந்திரத்தின் மீதான பாரிய அச்சுறுத்தலாகும். இச் செயற்பாட்டினை தனியே குறித்த ஒரு ஊடகவியலாளருக்கு எதிரான உரிமை மீறலாக கடந்து சென்றுவிட முடியாது.

அந்தவகையில், சமூக விரோத செயற்பாடுகளை துணிச்சலுடன் வெளிச்சம் போட்டு காட்டிவரும் சுயாதீன ஊடகவியலாளர் மு.தமிழ்ச்செல்வன் மீதான தாக்குதல் சம்பவத்தை யாழ் வடமராட்சி ஊடக இல்லம் வன்மையாக கண்டிக்கின்றது.

ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்க அவர்கள் தலைமையிலான புதிய அரசாங்கத்திலும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கின்றமை ஏமாற்றமே.

அநுரவின் ஆட்சியில் இலக்கு வைக்கப்படுகிறார்களா தமிழர்கள்!

அநுரவின் ஆட்சியில் இலக்கு வைக்கப்படுகிறார்களா தமிழர்கள்!

யாழ் வடமராட்சி ஊடக இல்லம்

இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபட்டு இருவர் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஆரம்பகட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டிருக்கும் காரணமானது விடயத்தை திசைதிருப்பி உண்மை குற்றவாளிகளை காப்பாற்றும் நோக்கில் திட்டமிட்டு கூறப்பட்டிருப்பதாக, தாக்குதல் சம்பவத்தின் போது அவர்கள் வெளிப்படுத்திய வார்த்தைப் பிரயோகங்களின் பின்னணியில் ஆணித்தரமாக நம்பப்படுகின்ற நிலையில் தாக்குதல் சம்பவம் தொடர்பில் எமக்கும் பலத்த ஐயம் ஏற்பட்டுள்ளது.

தமிழ் ஊடகத்துறை மீது தொடரும் அச்சுறுத்தல்: ஜனாதிபதியிடம் வலியுறுத்து | Tamil Media Threat In Sri Lanka

ஆகவே குறித்த கைது சம்பவத்தோடு மட்டுப்படுத்தப்பட்டதாக விசாரணை நடவடிக்கைகள் முற்றுப்பெறாது பின்னிருந்து செயற்படுத்திய உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து நீதி நிலைநாட்டப்படுவதனை உறுதிசெய்யும் வகையிலானதாக முன்னெடுக்கப்பட வழிவகை செய்ய வேண்டும்.

தமிழ் ஊடகத்துறை மீது காலத்திற்கு காலம் வெவ்வேறு வடிவங்களில் தொடரும் அச்சுறுத்தல் நிலையினை உடனடியாக தடுத்து நிறுத்துவதற்கும் அதற்கு காரணமானவர்களை பாரபட்சமின்றி சட்டத்தின் முன்நிறுத்தி உரிய நீதியினை வழங்குவதற்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இத்தருணத்தில் யாழ் வடமராட்சி ஊடக இல்லம் வலியுறுத்தி நிற்கின்றது என குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையின் மூத்த தமிழ் படைப்பாளர் யோகேந்திரநாதன் இன்று காலமானார்

இலங்கையின் மூத்த தமிழ் படைப்பாளர் யோகேந்திரநாதன் இன்று காலமானார்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, La Courneuve, France

06 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US